(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
பிரபல விமர்சகரும், பத்திரிகையாளருமான கே.எஸ்.சிவகுமாரன் கொடகே வருடாந்த பரிசுத்திட்டத்தின் கீழ் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டதை கௌரவிக்குமுகமாக புரவலர் புத்தகப் ப+ங்காவின் ஏற்பாட்டில் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் இன்று 08.09.2012 அவரது இல்லத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றபோது பத்திரிகையாளர் சிவகுமாரன் பொன்னாடைபோர்த்தியும் புரவலரால்
நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேற்படி நிகழ்வில் நவமணி ஆசிரியர் என்.எம். அமீன் விஷேட உரைநிகழ்த்தியதுடன் மூத்த எழுத்தாளர் அன்ரனி ஜீவா, தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம், சுடர்ஒளி ஆசிரியர் சிவராஜ், கொடகே நிறுவன உபாலி நீலரத்ன ஆகியோர் கே.எஸ்.சிவகுமாரனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.