கிழக்கு மாகாணத்தை மையமாகக்கொண்டு ஐக்கிய முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சி விரைவில் பிரகடனப்படுத்தப்படவள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக கிழக்கு மாகாண மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது பாரிய அதிருப்தியுற்றிருக்கும் நிலையில் அரசாங்கத்தின் பதவிகளை அலங்கரிக்காத முஸ்லிம் கட்சியின் அவசியம் உணரப்பட்டு வருககிறது. குறிப்பாக கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் உறுப்பினர்களும் கட்சிக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றி விட்டதாக மக்கள் உணர்கிறார்கள். இதன் காரணமாக ப+னைக்கு யார் மணி கட்டுவது என்ற மக்களின் எதிர் பார்ப்புக்கிணங்க ஐக்கிய முஸ்லிம் காங்கிரஸ பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தெரிகிறது.
கல்முனையை முகவரியாகக்கொண்டு இயங்கப்போகும் இக்கட்சி முதலில் கல்முனையிலும் பின்னர் அம்பாரை மாவட்டம், கிழக்கு மாகாணம் என பரவலாக்கப்பட்டு முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் உண்மையான, நேர்iமாயான குரலாக செயற்படவுள்ளதோடு வெளிப்படைத்தன்மை கொண்ட யாப்பைக்கொண்டதாக செயற்படவுள்ளது. இதில் அங்கத்தவர்களாக இணைய விரும்புவோர் தமது பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றை குறிப்பிட்டு 0775449017 எனும் இலக்கத்துக்கு எஸ் எம் எஸ் அனுப்பம்படி கேட்கப்பட்டுள்ளது.