BREAKING NEWS

ஓர் இலங்கை முஸ்லிமின் நிலை

ஓர் இலங்கை முஸ்லிமின் நிலை


ஒரே அச்சமாய் இருக்கிறது..
வெளியே சென்றால்
திரும்பி வருவேனா
தெரியவில்லை.
தொழிலுக்கு போன மகன்
தொலையாமல் வருவானா?
தொடை நடுங்குகிறது.
ரியுசனுக்கு போன மகள்
ஆடையுடன் திரும்புவாளா?
நினைத்தால் உடம்பெல்லாம்
உதறல் எடுக்கறிறது.
இஷா தொழுவதற்காக
பள்ளிக்கு போனால்
பள்ளிவாசல் இருக்குமா
புதிராக இருக்கிறது.
நண்பர்கள் முகமெல்லாம்
மரண தண்டனைக்கைதியின்
வாசம் தெரிகிறது
ஆனாலும் எங்களது
அமைச்சர்களும்,
உறுப்பினர்களும்
இiணைப்பாளர்களும்
கசாப்புக்கடை
கலாநிதிகளும்
ஜிரோக்களில் சுகமாய்
தூங்குகிறார்கள்.
அவர்களை இன்னமும்
மாலையிட்டு வரவேற்கும்
இழிச்சவாய் கூட்டம்
உயிரோடுதான் இருக்கிறது.

-கவிஞர் முபாறக் அப்துல் மஜீத்
(இன்று கடுமையான காய்ச்சல், வாந்தி. இத்தனைக்கும் மத்தியில் உதித்த கவிதை இது)

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar