கருணாநிதிக்கு மீனவர் பிரச்சினை தொடர் பில் தெளிவு இருப்பதாக கூறிய அமைச்சர், அவர் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பிரச்சினையை தீர்க்க கூடுதல் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போதைக்கு இந்திய தேர்தல் முடியும் வரை இந்த விவகாரத்தில் முடிவு ஏற் பட வாய்ப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் படகுகளை திருப்பி வழங்காமல் தடுத்து வைக்கும் செயற்பாடு தொடர்ந்து கடுமையாக முன்னெடுக்கப்படும் எனவும் எமது வளங்களை சூறையாடி வடபகுதி மீனவர்களுக்கு பாதிப்பு எற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தீர்வுகாணப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.