BREAKING NEWS

சாய்ந்தமருதில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வும் அனர்த்த முகாமைத்துவ விழிப்பூட்டல் நிகழ்வும்

( 
சுனாமி இப்பிரதேசத்தை கபளீகரம் செய்து ஒன்பதாவது வருட நிறைவடைந்துள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு தின நிகழ்வும் அனர்த்த முகாமைத்துவ விழிப்பூட்டல் நிகழ்வும், நேற்று வியாழக்கிழமை (26.12.2013) அன்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் மற்றும் சாய்ந்தமருது மாவட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் என். ஆரிப் மற்றும் கல்முனை போலீஸ் நிலைய பொது மக்கள் தொடர்பு அதிகாரி ஏ.எல்.ஏ. வஹீட் மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.சி.ஏ.வாகிர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களையும் வளிகாட்டுதல்களையும் வழங்கினர்.
Anartham 6
Anartham 1

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar