இனங்களுக்கிடை யிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் விதமாக தேசிய ஒற்றுமைக்கான மக்கள் மாநாடொன்றினை கொழும்பில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மாநாட்டின் இறுதியில் நாட்டிற்குள் பிரிவினைவாதத்தை உருவாக்க முயற்சிக்கும் சில சதிகார கும்பல்களை முறியடிக்கும் வகையில் தேசிய ஒற்றுமைக்கான பிரகடனமொன்று வெளியிட்டு வைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது பணிப்புரையின் பேரில் இந்த மாநாட்டினை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத் துவதற்கான ஏற்பாடுகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
இதற்கிணங்க பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மார்ச் 26 ஆம் திகதியன்று தேசிய ஒற்றுமைக்கான மக்கள் மாநாடு நடத்த ஏற்பாடாகியுள்ளது.
இதற்கும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அமர்வுகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை யெனவும் இது எமது நாட்டிற்குள் இன ஐக்கியம் மற்றும் தேசிய ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கான செயலெனவும் அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் நான்கு இனங்களையும் சேர்ந்த கல்விமான்கள், கலைஞர்கள், பேராசிரியர்கள், சமையத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்களென அனைத்து தரப்பையும் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் பிரதிநிதித்துவப்படுத்த வுள்ளனர். இவர்கள் மாநாட்டின் முடிவில் இலங்கையில் இனிமேலும் ஒரு யுத்தம் வேண்டாமென்ற உறுதியான பிரகடனத்தை வெளியிடுவரெனவும் அமைச்சர் கூறினார்.