பாலியல் குற்றங்களை தடுக்க பெண்களிடம் சுயகட்டுப்பாடு தேவை எனும் மகளிர் ஆணைய உறுப்பினர் ஆஷாவின் கருத்தால் நாடு முழுவதும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கும் நிலையில் தந்தி டிவியில் நேற்று இதுபற்றிய விவாதம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இந்து சகோதரிகளான அமுதா குப்புசாமியும் பத்மா எனும் பெண்மணியும் பெண்களிடம் உடை, ஆண்களுடன் தனித்து இருத்தல், இரவில் வெளியே செல்லுதல், தக்க துணையின்றி தனியே செல்லுதல் போன்ற விஷயங்களில் சுயகட்டுப்பாடு தேவை என தெளிவாக வாதங்களை வைத்தனர். மக்கள் கருத்தும் 94% இதற்கு ஆதரவாகத்தான் இருந்தது.
ஆனால் முஸ்லிம் பெயர்தாங்கி சல்மா எந்த வலுவான வாதத்தயும் வைக்காமல் திரும்ப திரும்ப ஆணாதிக்கம்! முழுவதும் போர்த்தினால் பாலியல் குற்றம் நடக்காதா? தனியாக சென்றால் கற்பழிப்பார்களா? இரவில் செல்லுதல் குற்றமா? எனும் ரீதியாக பேசி வாதம் எடுபடாததால் தானும் எரிச்சலுற்று நேயர்களையும் எரிச்சல் ஊட்டினார்.
சல்மா மட்டுமல்ல பல போலி பெண்ணுரிமை வாதிகள் இந்த வாதத்தை தான் வைக்கிறார்கள்.
நாங்கள் வைரத்தை வாசலில் காய வைத்திருப்போம் யாரும் திருடக்கூடாது.
நெருப்புக்கு அருகில் மெழுகை வைப்போம் உருகக்கூடாது.
நாங்கள் கண்ணாடி வண்டியை கண்டபடி ஓட்டுவோம் எதிரே வருபவர் தான் பார்த்து வரவேண்டும்!
என்பது போல்தான் இருக்கிறது.
யாருக்கு பாதுகாப்பு தேவையோ அவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது தவறா? ஆண் குழந்தைகளுக்கு கூட பாலியல் தொந்தரவு நடக்கிறது.
பெண்களுக்கு கற்பு எவ்வளவு பெறுமதியோ ஆண்களுக்கு பணம் பெறுமதி! அதை திருடுபவர்களிடம் பாதுகாப்பாக இருங்கள் என்பது தவறா?
பைக்கில் வெளியே செல்லும் மகனிடம் நிறைய விபத்து நடக்கிறது பார்த்து போடா!'என சொல்வது தவறா?
இரயிலில மயக்க பிஸ்கட் கொள்ளையர்கள் இருக்கிறார்கள் யாரிடமும் எதையும் வாங்கி உண்ணாதீர்கள் என்பது தவறா?
நீங்கள் பெண்களுக்கே புத்தி சொல்கின்றீர்கள் ! ஆண்களிடம் பெண்ணை சகோதரியாக மகளாக பாருங்க என சொல்லுங்கள் என்கிறார்.
மகளை, சகோதரியை கூட பாலியல் கொடுமை செய்கின்ற பரதேசி நாய்களும் இருக்கும் காலத்தில் பாதுகாப்பாக இருங்கள் என்பது தவறா?
இதை சொன்னால் ஆணாதிக்கமா? அல்லது பெண்கள் மீதுள்ள அக்கறையா?
கொசுக்கடியில் இருந்து பாதுகாப்பாக இருக்க வலை போட்டுக் கொள் என்றால் மாட்டேன் நீங்கள் கொசுவிடம் போய் கடிக்க கூடாது என புத்தி சொல்லுங்கள் என்பது போல்தான் இந்த பெண்ணுரிமை வியாதிகளின் வாதமும்.
இஸ்லாம் மட்டும் தான் இதற்கு தீர்வு சொல்கிறது!
இஸ்லாம் பெண்களுக்கு சொல்லும் அறிவுரைப்படி நடந்தால் பாலியல் குற்றங்களை பெருமளவு குறைக்கலாம் என சொல்ல வேண்டிய இடத்தில் சல்மா போன்ற சல்லிப் பெண்கள் வழிகேட்டுக்கு வக்காலத்து வாங்குவது சமுதாயத்தின் சாபக்கேடு!