BREAKING NEWS

முஸ்லிம்கள் கடத்தப்பட்ட இடங்களை கண்காணிப்பு குழு பார்வையிட்டது


மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் 12.07.1990 காலப் பகுதியில் புலிகளால் கடத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 100 க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள்
புதைக்கப்பட்டு ள்ளதாக சந்தேகிக்கப்படும் இடங்களை காணாமல் போனவர்களின் முறைப் பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழு நேற்று சனிக்கிழமை மாலை அவ்விடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவிடம் 112 முறைப்பாடுகளை கையளித்த பின்னர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அவ்விடத்திற்கு விஜயம் மேற்கொண்ட அக் குழுவினர், குருக்கள் மடம் கடற்கரைப் பகுதியில் 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 3 இடங்களை பார்வையிட்டதோடு அவ்விடங்களை தோண்டுவதற்கான நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்தோடு இது சம்பந்தமாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்கை காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு சமுகமளிக்குமாறு ஆணைக் குழுவின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ் விஜயத்தில் காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம, ஆணைக் குழுவின் ஆணையாளர்களான திருமதி மனோ ராமநாதன், திருமதி சுரஞ்சனா வித்தியரத்ன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், ஆணைக் குழுவின் உயரதிகாரிகள், ஊடகவியலாளர்கள், புலனாய்வு பிரிவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar