BREAKING NEWS

மத்தல விமான நிலைய நிர்வாகத்தை மிஹின் லங்கா பொறுப்பேற்கும்


மத்தல ராஜபக்ஷ சர்வ தேச விமான நிலை யத்தின் செயற்பாடுகளை சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தி டம் இருந்து மிஹின் லங்கா நிறுவனம் விரை வில் பொறுப்பேற்கும் என்று சிவில் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

தற்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மிஹின் லங்கா நிறுவனம் முழுமையாக மத்தல விமான நிலையத்திற்கு தனது பணிகளை மாற்றிவிடும் என்றும் அங்கு மிஹின் லங்கா விமானங்களுக்கு எரிபொருளை நிரப்புதல் போன்ற பலதரப்பட்ட பணிகளை ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப்படுகிறது.
மிஹின்லங்கா விமான நிலையத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயரட்ன தெரிவித்தார். தற்போது மிஹின் லங்கா நிறுவனத்திடம் மூன்று விமானங்கள் இருக்கின்றன. இதனடிப்படையில் மிஹின் லங்காவின் விமான சேவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar