கடற்படையினர் கைப்பற்றியுள்ள விவசாய காணிகளைத் திருப்பித் தரக்கோரி மன்னார் மக்கள் ஆர்ப்பாட்டம்.
Posted by
aljazeeralanka.com
on
March 10, 2014
in
|
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசத்தில் கடற்படையினரால் கைப்பற்றியுள்ள கிராம மக்களுக்குச் சொந்தமான விவசாய காணிகளைத் திருப்பித் தரவேண்டும் எனவும், மீள்குடியேறியுள்ள காணியற்ற குடும்பங்களுக்குக் காணிகள் வழங்க வேண்டும் எனவும் கோரி நேற்று சாலை மறிப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.
மறிச்சுக்கட்டி, மரைக்கார்தீவு கிராம மக்களுக்குச் சொந்தமான விவசாய காணிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக போராட்டம் நடாத்திய மக்கள் தெரிவித்தனர்.