BREAKING NEWS

வீரம் பேசிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் சத்தத்தையே காணவில்லை

தேர்தல் முடிந்ததிலிருந்து வீரம் பேசிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் சத்தத்தையே காணவில்லை. ஆனாலும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் இன்னமும் தீரவல்லை. அனேகமாக இன்னொரு தேர்தல்
வந்தால்த்தான் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் உற்சாகம் வரும் போல் தெரிகிறது. எனினும் நாம் இழந்தவற்றை இங்கு ஞாபகப்படுத்துகிறேன். ஞாபகமூட்டுவீராக. நிச்சயமாக ஞாபமூட்டுதால் முஃமின்களுக்கு நன்மை தரும்.-அல்குர்ஆன்.

-ஒழிக்கப்பட்ட ஹலால் நடைமுiறைக்கு மீண்டும் அரசு அனுமதி தரவேண்டும்.
-உடைக்கப்பட்ட பள்ளிவாயல்கள் விசாரணைக்ட்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
-தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்களின் கலாசாரம் பேணப்பட
வேண்டும்.
பள்ளிவாயல் கட்ட புத்த சாசன அனுமதி கோர வேண்டும் என்பது அநியாயமானது. முஸ்லிம் கலாசார திணைக்கள அனுமதி போதுமானது என்பதை அரசு அறிவிக்க வேண்டும்.
ஒலுவில் காணிகளுக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.
புல்மோட்டை காணிப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்
கண்ணியா, கருமலையூற்று பள்ளிவாயல்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
சட்டக்கல்லூரி பரீட்சை ஊழல்கள் மூலம் முஸ்லிம்களுக்கு வஞ்சம்.

இன்னும்பல. அடுத்த தேர்தலில் நமது கட்சிகளை சந்திக்கலாம், இவற்றுடன்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar