பொதுபல சேனா அமைப்பைக் கட்டுப்படுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தி ஐக்கிய இராஜ்யத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இராஜ்யத்தின் லண்டன் நகரிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னாள் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய இராஜ்யத்தின் பல பகுதிகளிலும் வாழும் இலங்கை முஸ்லிம்கள் பலர் கலந்துகொண்டனர். இதன்போது ஏழு அம்சங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் இராஜ்யத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.



