மென்பொருளால் கட்டுப்படுத்தப்படும் நவீன செயற்கைக் கரம்
Posted by
aljazeeralanka.com
on
May 21, 2014
in
|
மென்பொருளால் கட்டுப்படுத்தப்படும் அதிநவீன செயற்கை இலத்திரனியல் கரமொன்று ஜேர்மனியின் லெயிப்ஸிக் நகரில் செவ்வாய்க்கிழமை(13) ஆரம்பமான ஒட்வேர்ல்ட் உலக எலும்பியல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
உலகிலேயே மிகப் பெரிய எலும்பியல் கண்காட்சியான இந்த கண்காட்சியில் 37 நாடுகளைச் சேர்ந்த 548 அங்கத்தவர்களது உற்பத்திகள் காட்சிப் படுத்தப்பட்டன.
மேற்படி நிகழ்வில் 20000க்கு மேற்பட்ட நிபுணர்கள் கலந்து கொள்வார்கள் என நம்பப்படுகிறது.
இந்நிகழ்வில் அறிமுகப்படுத்த ஐ - அவயவம் என அழைக்கப்படும் செயற்கைக் கரம் பயன்பாட்டாளரது மனதால் கட்டுப்படுத்தப்படுவதுடன் நிஜகரத்தைப் போன்ற தோற்றப்பாட்டையும் செயற்பாட்டையும் கொண்டுள்ளது.