பைஸர் முஸ்தபா மன்றத்தின் அனுசரணையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சமன் அபேகுண ரத்னவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நெய்ச்சோறு
( தன்சல்) தானம்,கொழும்பு-மருதானை, சீமன்ஸ் வீதி, அபேகுணரத்ன பொது மக்கள் வரவேற்பு மண்டபத்தில் கடந்த 14 புதன்கிழமையன்றும்,15 வியாழக்கிழமையன்றும், அன்றும் இரவு 7.00 மணிமுதல் , முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும் ஸ்ரீல. சு.க மத்திய கொழும்பு அமைப்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. இவ் தன்சல் நிகழ்வில் பிரதி அமைச்சர் , பிரமுகர்கள் , பொதுமக்கள் கலந்துகொண்டிருப்பதைப் படங்களில் காணலாம்.
(படங்கள் : ஐ . ஏ . காதிர்கான் )
