BREAKING NEWS

பொசன் விழா கொண்டாடுகிறார் ரஊப் ஹக்கீம்

மூவின மக்களின் ஒற்றுமைக்கு முழு இலங்கைக்கும் முன்னுதாரணமாக மத்தியமுகாம் நகரத்தை பார்க்கின்றேன். கடந்த யுத்தகாலத்தில் கூட இப்பிரதேசத்தில் வாழும் இனங்களிடையே எந்தவித பிரச்சினைகளும் வந்ததாக நான் அறியவில்லை.

இவ்வாறு மத்தியமுகாம் நகரில் அமைந்துள்ள லும்பினி விகாரையில் இன்று (12) இடம்பெற்ற பொசன் பௌர்ணமி தின விருந்துபசார நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்.


தமிழ், முஸ்லிம், சிங்கள இனங்களிடையே பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்தும் நோக்குடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பகல் போசனத்தில் கலந்து கொண்டனர்.


மத்தியமுகாம் லும்பினி விகாரையின் விகாராதிபதி சீலரத்ன தேரர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப்ஹக்கீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நஸீர், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.தஜாப்தீன், ஏ.கே.அப்துல் சமட், நாவிதன்வெளி பிரதேச கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான ஏ.சீ.எம்.நஸார் ஹாஜி, ஏ.எம்.லத்தீப், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar