BREAKING NEWS

நாங்கள் ஐக்­கி­ய­மாக நின்றால் சிங்­கள பேரி­ன­வாத சக்­தி­களால் ஒன்றும் செய்­து­விட முடி­யாது

லங்­கையில் வாழும் அனைத்து இன மக்­களும் கௌர­வ­மா­கவும் உரி­மை­க­ளு­டனும் வாழ்­வ­தற்கு அவ்­வின மக்­களின் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்த ஐக்­கிய முன்­ன­ணி­யொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். நாங்கள் ஐக்­கி­ய­மாக நின்றால் சிங்­கள பேரி­ன­வாத சக்­தி­களால் ஒன்றும் செய்­து­விட முடி­யாது. நாம் தலை­நி­மிர்ந்து வாழ்­வ­தற்கு எமக்­கி­டையில் ஏற்­படும் ஐக்­கி­யமே ஒரு தீர்­வாக அமையும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.
 
கட்­சியின் 34ஆவது சிறப்பு மாநாட்­டினைத் தொடக்­கி­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.
 
யாழ்.வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நேற்றுக் காலை நடை­பெற்ற இம்­மா­நாட்டில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன், பொதுச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராசா, முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் ஹசன் அலி, ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவர் மனோ கணேசன், நவ­ச­ம­ச­மாஜக் கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன, பரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான செல்வம் அடைக்­க­ல­நாதன், எம்.கே.சுமந்­திரன், சிவ­சக்தி ஆனந்தன், மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ராதா கிருஷ்ணன் மற்றும் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்ரன், அவைத் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம், உறுப்­பி­னர்­க­ளான திரு­மதி அனந்தி சசி­தரன், ரவி­கரன், சிவ­மோகன், சர்­வேஸ்­வரன் , கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் துரை இரத்­தினம் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.
 
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிறே­மச்­சந்­திரன் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
 
மிகவும் இக்­கட்­டான ஒரு­கால கட்­டத்தில் ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணி­யி­னு­டைய 34ஆவது வருட சிறப்பு மாநாட்டில் நாங்கள் எல்­லோரும் கூடி­யி­ருக்­கின்றோம்.
இலங்கை அரசின் அடக்கு முறைக்கு உள்­ளாக்­கப்­பட்ட பல்­வே­று­பட்ட சமூ­கங்­களின் தலை­வர்­களும் பிர­தி­நி­தி­களும் இந்த மேடையில் இன்று ஒன்­றாகக் குழு­மி­யி­ருக்­கின்றோம். அர­சாங்­கத்தின் பாரிய நெருக்­க­டி­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு உரி­மைகள் மறுக்­கப்­பட்டு அவர்­க­ளு­டைய நம்­பிக்­கைகள், கலா­சா­ரங்கள், பண்­பா­டுகள் அழிக்­கப்­பட்டு சிங்­களப் பெரும் தேசி­ய­வா­திகள் கட்­ட­ளை­யி­டு­வது போன்று ஏனைய சிறு­பான்­மை­யி­னங்கள் வாழ வேண்­டு­மென்று கூறும் ஒரு கால­கட்­டத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். இந்துக் கோயில்கள் உடைக்­கப்­ப­டு­கின்­றன. கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் உடைக்­கப்­ப­டு­கின்­றன. முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் உடைக்­கப்­ப­டு­கின்­றன. பௌத்­தத்தை தவிர ஏனைய மத நம்­பிக்­கைகள் இருக்கக் கூடாது என்ற அடிப்­ப­டை­யிலே அர­சாங்­கமும் அதன் பங்­காளிக் கட்­சி­களும் செயற்­ப­டு­கின்­றன.
 
இலங்கை அர­சாங்கம் பொலிஸ் அதி­கா­ரங்­களைக் கொடுக்க முடி­யாது, காணி அதி­கா­ரங்­களைக் கொடுக்க முடி­யாது என்று பல்­வேறு வித­மான அர­சியல் யாப்­பிற்கு முர­ணான கருத்­துக்­க­ளையும் பேசி வரு­கின்­றது. ஆனால் வடக்கு, கிழக்கு மாகாண சபை உரு­வாக்­கப்­பட்­ட­போது சுமார் 3 ஆயிரம் பேரைக் கொண்ட வட, கிழக்­கிற்­கான ஒரு பொலிஸ் துறையை உரு­வாக்­கினோம். இதற்குத் தேவை­யான கல்வித் தகை­மை­யுடன் பொலிஸ் துறைக்­கான ஆள­ணியை உரு­வாக்­கு­வதில் ஏற்­பட்ட கால அவ­காசத் தேவை கார­ண­மாக குறைந்த பட்ச கல்வித் தகை­மை­யுடன் ஆட்கள் உள்­வாங்­கப்­பட்­டார்கள். இதன் கார­ண­மாக பொலி­ஸிற்­கான முழு அதி­கா­ரங்­க­ளையும் இவர்கள் கொண்­டி­ருந்த பொழுதும் பொலிஸ் என்­ப­தற்குப் பதி­லாக இவர்­களைக் குடி­மக்கள் தொண்­டர்­படை என அழைத்­தார்கள். அப்­பொ­ழு­தி­ருந்த ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­தனா அரச வர்த்­த­மா­னியில் பிர­சு­ரித்த அரச கட்­ட­ளையின் பிர­கா­ரமே இந்த 3 ஆயிரம் பேரும் பொலிஸ் துறைக்குத் தெரிவு செய்­யப்­பட்­டனர். ஆனால் மாகாண சபை கலைக்­கப்­பட்­ட­துடன் இந்தக் குடி­மக்கள் தொண்­டர்­ப­டை­யையும் அன்­றைய பிரே­ம­தாஸா அர­சாங்கம் நிரந்­த­ர­மாக்­கு­வ­தற்கு மாறாக கலைத்­து­விட்­டது என்­ப­துதான் கசப்­பான உண்­மை­யாகும்.
 
இதே­போன்று நூற்­றுக்கும் மேற்­பட்ட பட்­ட­தா­ரி­களை மாகாண சபை உள்­வாங்கி அவர்­க­ளுக்கு திட்­ட­மிடல் துறையில் பயிற்­சி­ய­ளித்து அவர்கள் திட்­ட­மிடல் அதி­கா­ரி­க­ளாக, பணிப்­பா­ளர்­க­ளாக வடக்கு, கிழக்கு முழு­வதும் நிய­மிக்­கப்­பட்­டனர். அவ்­வாறு அன்று திட்­ட­மிடல் பணிப்­பா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­கள்தான் இன்று வடக்கு, கிழக்கில் முக்­கிய பொறுப்­புக்­களில் இருக்­கின்­றனர் என்­ப­தையும் நான் இங்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன்.
 
பதின்­மூன்­றா­வது திருத்தச் சட்­டத்தில் உள்ள அதி­கா­ரங்கள் போது­மா­னவை அல்ல என்­பதும் ஒற்­றை­யாட்­சிக்குள் இவ்­வ­தி­கா­ரங்கள் பறிக்­கப்­ப­டலாம் என்­பதும் இன்­று­வரை இருக்­கக்­கூ­டிய நிதர்­ச­ன­மான உண்­மை­யாகும். ஆனாலும் கூட எமக்குக் கிடைத்த அந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்­தி­யன்தன் கார­ண­மா­கத்தான் வடக்கும் கிழக்கும் 18 வரு­டங்கள் இணைந்­தி­ருந்­தன என்­ப­தையும் வடக்கு, கிழக்கு நிர்­வா­கத்­திற்­கான கட்­டு­மா­னங்­களை உரு­வாக்­கினோம் என்­ப­தையும் நான் இங்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன்.
 
இந்­திய இலங்கை ஒப்­பந்­த­மா­னது உரு­வாக்­கப்­பட்­டதில் அமரர் அமிர்­த­லிங்கம் தலை­மை­யி­லான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்கும் ஒரு முக்­கிய பங்கு இருந்­தது. இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்தில் பேசப்­பட்ட விட­யங்கள் அனைத்தும் பதின்­மூன்­றா­வது அர­சியல் சாசனத் திருத்­தத்தில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்­பதும் இலங்கை அர­சாங்கம் தமிழ்த் தலை­மை­க­ளுக்குத் தெரி­யாமல் இதனை நிறை­வேற்­றி­யது என்­பதும் பின்னர் நாங்கள் புரிந்­து­கொண்ட விட­யங்கள். ஆனால் அன்­றி­லி­ருந்து இன்­று­வரை எந்­த­வொரு அர­சாங்­கமும் மாகாண சபைக்கு உரித்­தான அதி­கா­ரங்­களைக் கூட முழு­மை­யாகப் பகிர்­வ­தற்குத் தய­ராக இருக்­க­வில்லை.
 
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே தமிழ் மக்­களின் ஏகப் பிர­தி­நி­திகள் என்­ப­தனை சர்­வ­தேச உல­கிற்கு எடுத்­துக்­காட்­டி­யுள்­ள­துடன் இன்று தமிழ் மக்­களின் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளா­கவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை சர்­வ­தேச சமூகம் அங்­கீ­க­ரித்­துள்­ளது. இவ்­வாறு தமிழ் மக்­க­ளி­டமும் சர்­வ­தேச சமூ­கத்­தி­டமும் அங்­கீ­காரம் பெற்ற ஒரு கட்சி எந்­த­வி­த­மான கட்­ட­மைப்­புக்­களோ பொறி­மு­றை­களோ இன்றிச் செயற்­ப­டு­வ­தா­னது தமிழ் மக்­க­ளி­னு­டைய விடு­தலைப் போராட்­டத்­திற்கு உந்­து­சக்­தி­யாக இருக்க முடி­யாது என்­பதை கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் கட்­சிகள் புரிந்­து­கொள்ள வேண்டும்.
 
வடக்கு மாகாண சபைத் தேர்­தலில் 38 ஆச­னங்­களில் 30 ஆச­னங்­களைப் பெற்று மிகப் பெரிய பலத்­துடன் நாங்கள் ஆட்சி அமைத்தோம். மக்­க­ளுக்கும் பாரிய எதிர்­பார்ப்­புக்­களும் இருந்­தது. ஆனால் இலங்கை அர­சாங்கம் முத­ல­மைச்­சரும் அமைச்­ச­ர­வையும் செயற்­ப­டுத்த வேண்­டிய அதி­கா­ரங்­களைச் செயற்­ப­டுத்த விடாமல் அல்­லது அதனைச் செயற்­ப­டுத்த ஒத்­து­ழைக்­காமல் ஆளுநர் வசமும் பிர­தம செய­லாளர் வசமும் அதி­கா­ரங்­களை வைத்­தி­ருப்­பதால் மாகாண சபை முழு­மை­யாக இயங்க முடி­யாத துர்ப்­பாக்­கிய சூழலும் ஏற்­பட்­டுள்­ளது.
 
கடந்த வாரம் வட­மா­காண ஆளு­நரின் பதவிக் காலம் முடி­வ­டைந்த நிலையில் மீண்டும் அது நீடிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. மிகவும் நீண்­ட­கா­ல­மாக யுத்தம் நடந்த பூமியில் அந்த யுத்­தத்தை நடத்­தி­ய­
வரும் பல நூறு பொது­மக்­களின் அழி­விற்கும் காணா­மல்­போ­வ­தற்கும் கார­ண­மா­யி­ருந்­த­வரை ஆளு­ந­ராகத் தொடர்ந்து வைத்­தி­ருப்­பது அம்­மண்ணில் ஒரு ஜன­நா­யக சூழல் உரு­வா­கவோ உத­வி­க­ர­மாக அமை­யாது என்ற அடிப்­ப­டையில் அதி­காரப் பகிர்வில் நம்­பிக்கை கொண்ட கூட்­டாட்சி தத்­து­வதில் நம்­பிக்கை கொண்ட சிவில் சமூ­கத்தைச் சார்ந்த ஒரு­வரை ஆளு­ந­ராக நிய­மிப்­பதன் மூலம் இனப்­பி­ரச்­சினைத் தீர்­விற்கு ஒரு வழியைத் திறந்­து­விடும் என எதிர்­பார்த்தோம்.
 
ஆனால் அர­சாங்கம் அதனைப் புரிந்­து­கொள்­வ­தாக இல்லை. மாறாக வடக்கு மாகாண நிர்வாகத்தை முடக்கக் கூடிய வகையிலும் வடக்கு மாகாணம் தொடர்பான அரசின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் வல்லமை வாய்ந்த இராணுவ அதிகாரியையே அரசு தொடர்ந்து வைத்திருக்கின்றது. இராணுவ ஆக்கிரமிப்பு, இராணுவ நிர்வாகம் போன்றவற்றிக்கு ஒத்துழைக்கக்கூடிய ஓர் ஆளுநரையே அவர்கள் நியமித்துள்ளார்கள்.
 
இந்த மேடையில் இன்று உருவாக்கியிருக்கின்ற சந்திப்பானது தொடர வேண்டும் என்பதுடன் அத்தகையதொரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை உருவாக்க அடிப்படையாக இருக்க வேண்டுமென்றும் நான் இந்த மேடையிலுள்ள தலைவர்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் ஐக்கியப்படுவோமாக இருந்தால் சிங்கள பௌத்த தேசிய வாதம் எங்களை எதுவும் செய்துவிட முடியாது, மாறாக நாம் கௌரவமாகவும் தலைநிமிர்ந்தும் வாழ்வதற்கு எமக்கிடையில் ஏற்படக்கூடிய ஐக்கியம் ஒன்றே அதற்குரித்தான வழியென்று நான் கருதுகின்றேன் என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar