BREAKING NEWS

அளுத்­கம மற்றும் பேரு­வளை வன்­முறை குண்டர் குழுக்களே நடத்தியிருந்தன- ஹக்கீம்

ரணிலின் கேள்விகளுக்கு ஹக்கீம் இப்படி பதில் கூறுகிறார்

l
Puttalam-Hakeem1அளுத்­கம வன்­முறைச் சம்­ப­வத்­தின்­போது கொல்­லப்­பட்ட இரு­வரில் ஒருவர் துப்­பாக்கிச் சூட்­டி­னா­லேயே கொல்­லப்­பட்­டி­ருப்­பது ஊர்­ஜி­த­மா­கி­யுள்­ளது. எனினும், மற்­றை­யவர் துப்­பாக்­கிச்­சூட்­டினால் தான் உயி­ரி­ழந்­தாரா 

என்­பது தொடர்பில் இது­வ­ரையில் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என நீதி­ய­மைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் எழுப்­பப்­பட்ட அளுத்­கம சம்­பவம் தொடர்­பான பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­டளை 23 இன் கீழான கேள்வி தொடர்பில் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் இங்கு மேலும் கூறு­கையில்;
அளுத்­கம வன்­முறைச் சம்­பவம் கடந்த மாதம் 15ஆம் திக­தியும் தொடர்ந்து 16ஆம் திக­தியும் இடம்­பெற்­றி­ருந்­தது. சம்­பவம் நிகழ்ந்­த­வுடன் நிலை­மை­களை அறியும் வகையில் அங்கு நானே முதலில் சென்­றி­ருந்தேன். அப்­போது வலப்­பிட்­டிய எனும் பிர­தே­சத்தில் நடத்­த­ப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டில் இருவர் கொல்­லப்­பட்­டி­ருப்­ப­தாக மக்கள் தெரி­வித்­தனர். அவ்­வாறு கொல்­லப்­பட்­ட­மைக்­கான சான்­று­களும் இருந்­தன.
இங்கு இடம்­பெற்ற புல­னாய்­வுப்­பி­ரிவு விசா­ரணை மற்றும் ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் துப்­பாக்கி ரவை­களும் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த வன்­முறைச் சம்­ப­வத்தில் இருவர் கொல்­லப்­பட்­டனர். அதே­வேளை, ஏழு பேர் படு­கா­ய­ம­டைந்­தனர்.
கொல்­லப்­பட்­ட­வர்­களில் ஒருவர் துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தி­லேயே கொல்­லப்­பட்­டி­ருப்­பது ஊர்­ஜி­த­மா­கி­யுள்­ளது. எனினும், மற்­றை­யவர் துப்­பாக்கிச் சூட்­டி­னால்தான் கொல்­லப்­பட்­டாரா என்­பது தொடர்பில் இது வரை­யிலும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இதனால் புதைக்­கப்­பட்ட சட­லங்­களை மீண்டும் தோண்டி எடுக்­க­வேண்­டிய நிலையே உரு­வா­கி­யுள்­ளது.
அளுத்­கம, பேரு­வளை, தர்­கா­நகர் பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட தட­யங்கள் அனைத்தும் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அதன் பின்­னரே அங்கு துப்­பு­ரவு வேலைகள் இடம்­பெற்­றன. தீவி­பத்து ஒன்று இடம்­பெற்று அது சந்­தே­கிக்கப்­படும் நிலை இருந்தால் மட்­டுமே இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டிய தேவை எழு­கின்­றது. பாணந்­து­றையில் வர்த்­தக நிலையம் எரி­யூட்­டப்­பட்­டமை சம்­பவம் தொடர்பில் இர­சா­யன பகுப்­பாய்வு பிரி­வினர் வர­வ­ழைக்­கப்­பட்­டனர்.
ஆனாலும், அளுத்­கம மற்றும் பேரு­வளை சம்­ப­வத்தில் இடம்­பெற்ற வன்­முறை மற்றும் தீவைப்பு ஆகியவற்றை குண்டர் குழுக்களே நடத்தியிருந்தன என்பது தெளிவாகும். ஆகவே, அங்கு இரசாயன பகுப்பாய்வுப் பிரிவினரை அழைக்கும் தேவை எழுந்திருக்கவில்லை. அளுத்கம சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இதன்மூலம் உண்மைநிலை வெளிப்படும் என்றார்.-வீரகேசரி

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar