BREAKING NEWS

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்து

இனங்களிடையேயான ஒருமைப்பாட்டுக்கு ரமழான் மாதம் சிறந்த வழிகாட்டி
ரமழானில் பெற்ற பயிற்சிகள் ஏனைய மாதங்களிலும் இடைவிடாது தொடர்வதற்கு திடசங்கட்பம்ப+ண வேண்டும். அத்துடன் ரமழானில் பொறுமையாக இருந்து,


வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டமை ஏனைய சமூகங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதென்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

முஸ்லிம்களின் நாலாவது கடமையான நோன்பு அவர்களின் வணக்க வழிபாடுகளில் பிரதான இடத்தை வகிக்கிறது.இம்மாதத்தில் தொடர்ச்சியாக ஒரு மாத காலம் நோன்பு நோற்று இன்று பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.

ரமழான் மாதத்தில் விழித்திருந்திருந்து, சுமார் 16 மணித்தியாலங்கள்
காலை முதல் மாலை எவ்வித பானங்களும், உணவுமின்றி இந்த மத அனுஷ்டானத்தை மேற்கொள்வது இறைவனின் உயர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வதற்காகும்.

குறிப்பாக நபிகளாரின் போதனைகளையும், அல்குர்ஆனையும் முற்று முழுதாக பின்பற்றி பசித்திருந்து, தாகித்திருந்து நோன்பு நோற்று இறைவனின் நல்லாசியை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

இறைவனின் ஆசியைப் பெற்று முஸ்லிம்கள் நோன்பிருந்ததைப் போன்று ஏனைய இனத்தவர்களும் இனங்களிடையே சகோதரத்துவம், ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இந்நந்நாளில் முன்வர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar