BREAKING NEWS

விமல் வீரவன்ச லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி; அரசுக்கு புதிதல்ல

அமைச்சர் விமல் வீரவன்ச தலைமை யிலான தேசிய சுதந்திர முன்னணி ஊவா தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பது புதிதல்ல என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப் பிலுள்ள கட்சிகள் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது இதற்கு முன்னரும் நடைபெற்றுள்ளது. தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் ஒருமித்து செயற்படுவதும் தொடர்ந்தும் நடைபெற்றுள்ளது.
இதுவே எமது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள் இருக்கும் ஜனநாயக சிறப்பம்சம் என்றும் அமைச்சர் கெஹலிய குறிப்பிட்டார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது என்பதையும் அமைச்சர் இங்கு நினைவுகூர்ந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசுக்குள் பிரச்சினை இருப்பதாலேயே இவ்வாறு அவர் தனித்து போட்டியிடுகிறார். அதுபோன்று அமைச்சர்களுக்கு இடையேயும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளனவே என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது,
பிரச்சினைகள், முரண்பாடுகள் இல்லை என நான் கூறமாட்டேன். ஆனால் சிறு சிறு பிரச்சினைகளையும் ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்து காண்பிக்கின்றன என்றும் அமைச்சர் கெஹலிய மேலும் குறிப்பிட்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar