BREAKING NEWS

நிஜம் மாதாந்த சஞ்சிகை

(அஷ்ரப் ஏ சமத்)

அக்கரைப்பற்றைச் சேர்ந்த பௌமி அவர்களை ஆசிரியராகக் கொண்டு நிஜம்
மாதாந்த சஞ்சிகை இன்று கொழும்பு தபால் கேட்போர் நிலையத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டு சஞ்சிகையின் முதல் பிரதியை மனித நேயன் தேசமான்ய இர்சாத் ஏ காதரிடம் கையளித்தார்.


இந் நிகழ்வு தேசமானய புரவர் அப்துல் கையும் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னிலை அவுஸ்;திரேலியாவில் இருந்து வந்;து கலந்து கொண்ட முன்னாள் பிரதியமைச்சர் நிசாமுத்தீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொத்துவில் எஸ்.பி மஜீத், முன்னாள் அமைச்சர் ஏ. ஆர் மன்சுர் ஆகியோறும் கலந்து கொண்டனர்.

நவமணி ஆசிரியர் என்.எம். அமீன், சட்டத்தரணி இர.சடகோபன், ராதா மேத்தா, அமைச்சர் ஹக்கீம், எஸ்.நிசாமுத்தீன் ஆகியோர் நூல்பற்றி உரையாற்றினார்கள். கின்னியா அமீர் அலி, ஆகியோறும் உரையாற்றினார்கள். ஏ.ஆர்.எம். ஜிப்றி, கலைவாதி கலீல், எஸ்.ஜ. நாஹ_ர்க்கனி, ஈழகணேஸ் தர்மலிங்கம் கவிதை, மற்றும் அறிவிப்பாளர்
எம்.ஜ.எம். இர்பான் அவர்களினால் இன்னிசை கீதம் இசைக்கப்பட்டது. நூலாசிரியர் பௌமி ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கினார். கொழும்பில் உள்ள இலக்கியவாதிகள்,

எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar