BREAKING NEWS

முஸ்லிம்களை ஏமாற்றும் ஹக்கீமின் அடுத்த கட்ட ஏமாற்று வியூகம். அரச அமைச்சர்களை சாட ஆரம்பித்து விட்டார்.

Hakeem (5)அமைச்சர் நிமால் சிறி­பா­ல டி.சில்வாவின் கருத்து எம்மை படு­மோ­ச­மாக பாதித்­துள்­ளது; அமைச்சர் ஹக்கீம் விசனம்!


ஊவா தேர்தலில் முஸ்லிம் கூட்டணியில் எமது வேட்பாளர்கள் போட்டியிடுவதாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்கின்ற அமைச்சர் நிமால் சிறி­பா­ல டி.சில்வாவின் கருத்து எம்மை படு­மோ­ச­மாக பாதித்­துள்­ளது!
முஸ்லிம் கட்­சிகள் ஒரே அணி­யாக இன்று நிற்­ப­தனால் ஆளும் கட்­சிக்கும் எதிர்க்­கட்­சிக்கும் அச்சம் ஏற்­பட்­டுள்­ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் தலை­வரும் நீதி­யமைச்சரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

காத்­தான்­குடி நகர சபையின் முன்னாள் தலைவர் மர்சூக் அக­மது லெவ்வையின் இல்­லத்தில் புதன்­கி­ழமை நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்கண்­ட­வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்­து­ரை­யாற்­றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம்;
“முஸ்லிம் கட்­சிகள் ஒரே அணியில் வரு­வ­தென்­பது ஒரு அச்ச நிலையை சில­ருக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பல தமிழ் கட்­சி­களின் கூட்­டாக செயற்­ப­ட ­மு­டி­யு­மாக இருந்தால் ஏன் முஸ்­லிம்கள் கூட்­டாக செயற்­பட முடி­யாது என பதுளை முஸ்­லிம்கள் கேட்­கின்­றனர்.
அவர்­களின் கேள்வி நியா­ய­மா­ன­தாகும். முஸ்லிம் கட்­சிகள் எல்­லோரும் ஒன்றுசேர்ந்து வந்தால் மாத்­தி­ரம்தான் நாங்கள் ஆத­ரிப்போம் எனவும் பதுளை முஸ்­லிம்கள் கூறினர்.
ஊவா மாகாண சபை தேர்­தலில் ஏற்­பட்­டுள்ள முஸ்லிம் கூட்டு தேசிய மட்ட அர­சி­யலில் முஸ்­லிம்கள் கையாள்­வ­தற்கு சிறந்த ஒரு மாற்று வழி­யாக இருக்­கப்­போ­கின்­றது என்ற எதிர்­பார்ப்­புடன் தான் உர­சிப்­பார்க்க வேண்
டும்.
முஸ்­லிம்கள் ஒரே அணியில் வரு­வதென்பது அர­சாங்க கட்சிக்கும் அதே போன்று எதிர்க்­கட்­சிக்கும் அச்­சத்தை கொடுத்துள்­ளது.
ஐக்­கிய தேசியக் கட்சி முஸ்­லிம்­களின் வாக்­கு­களை சுரண்டி, சுரண்டி அதில் பிழைப்பு நடத்­தி­யது. கிரா­மப்­புற சிங்­கள மக்­களின் வாக்­கு­களை ஐக்­கிய தேசியக் கட்சி பெறு­வ­தற்கு நாட்­டமே இல்லை.
முஸ்லிம் பேரம் பேசும் சக்தி என்­பது தேசிய அர­சி­யலில் ஆளும் கட்சி எதிர்க்­கட்­சி­க­ளுக்­கி­டையில் அர­சியல் சம நிலை­தன்மையை உருவாக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஒட்டுமொத்த முஸ்­லிம்­க­ளையும் திரட்டி முஸ்லிம் சமூகம் எதிர்நோக்­கு­கின்ற சவால்களை எதிர்கொள்­வ­தற்­கான அடுத்த வியூ­கத்தை வகுக்க வேண்டும்.
அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுக்கும் பிரே­ம­தா­ச­வுக்­கு­மி­டையில் இருந்த உறவு என்பது வித்­தி­யா­ச­மான உற­வாக இருந்­தது. அன்று நமது மறைந்த தலைவர் அஷ்ரப் எதிர்க்­கட்­சியில் இருந்தார். பிரே­ம­தாசா நண்­ப­னாக இருந்தார்.
நான் இன்று ஆளும் கட்­சியில் இருக்­கின்றேன். ஆனால் மகிந்த எதி­ரியாக பார்க்­கின்றார். இதை நீங்கள் சரி­யாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பில் ஒரு முஸ்லிம் வேட்­பா­ள­ரையும் போடா­தது தொடர்­பாக தவி­சாளர் ஒரு கருத்தைக் கூறினார். சிங்­கள கடும்போக்­கு­வா­திகள் குற்றம் காண்ப­தற்கு நல்ல சந்­தர்ப்­ப­மாக போய்­விட்­டது- எனக்­கூ­றினார்.
கடும்போக்குவாதிகள் இருக்கும் இடம் பற்றி பூரண அறிவு அர­சாங்­கத்­திற்கு இருக்­கின்­றது. அதை அலட்டிக் கொள்­ளத் ­தே­வை­யில்லை.
கடும்போக்­கு­வா­திகள் எப்­படி செயல்­ப­டு­கின்­றார்கள் என்­பது அர­சுக்கு நன்கு தெரியும். அத­னா­லேயே அர­சுக்கு விவஸ்­தையே இல்லை. ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு விவஸ்த்தை இருக்­கின்­றது.
ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பில் முஸ்லிம் வேட்­பா­ளர்­களை போடாமல் விட்­டதை வைத்து எங்­க­ளு­டைய கூட்­டா­ளி­மாரின் கட்­சிக்குள் முஸ்­லிம்கள் போட்­டி­யி­டு­கின்­றனர் என அமைச்­ச­ரவை நண்பர் நிமால் சிறி­பா­லடி சில்வா கூறி­யி­ருப்­பது எங்­களை படு­மோ­ச­மாக பாதித்­துள்­ளது.
அவர்­க­ளு­டைய வேட்­பா­ளர்­களை எங்­க­ளுக்குள் போடு­வ­தற்கு முயற்­சித்தார். நாங்கள் வேண்­டா­மெனக் கூறி­விட்டோம்.
வேட்­பா­ளர்­களை தந்து உதவி செய்­யத் ­தே­வை­யில்லை. விலகி நின்றால் அது எங்­க­ளுக்கு உத­வி­யாக இருக்கும் எனவும் தெரி­வித்தோம்.
அர­சாங்­கத்தின் கெடு­பி­டி­க­ளாக அர­சுக்கு கொந்­த­ராத்துச் செய்யும் கூட்­ட­மாக முஸ்­லிம்கள் ஒரே அணியில் நிற்­பதை விமர்­சனம் செய்­கின்­றனர். முஸ்­லிம்கள் ஒரே அணியில் நிற்­ப­தென்­பது இவர்­க­ளுக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
பொது­பல சேனா மற்றும் ராவ­ணா சக்தி, ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏற்­பாடு செய்த இஸ்ரேல் – பலஸ்தீன் தொடர்­பான ஆர்ப்­பாட்­டங்­களை நிறுத்த வேண்­டு­மெனக் கூறி­யுள்­ள­தாக நான் ஒரு குறுஞ்­செய்தி தகவல் ஒன்றில் பார்த்தேன்.
இந்த பொது­பல சேனா,மற்றும் ராவ­ண­ாசக்தி, ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்­புக்­களை மோத­வி­டு­வது என்­பது ஒரு தேவைக்­கா­கவே நடை­பெ­று­கின்­றது. இதை சரி­யாக புரிந்து கொள்­ள ­வேண்டும்.
முஸ்­லிம்கள் ஆத்­தி­ரப்­ப­டு­வதில் முந்திக் கொள்­கின்­றனர். இவை அனைத்­துக்கும் பின்னால் ஒரு சக்­தியே உள்­ளது. அது வெளி­நாட்டு சக்­தியா அல்­லது உள்­நாட்டு சக்­தியா என்­பதை நீங்­களே தீர்­மா­னித்துக் கொள்­ளுங்கள்.
ஏதிர்க்­கட்சி இன்று அதற்­கான தகு­தியை இழந்­துள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க இரண்­டா­வது தட­வை­யாக ஐந்­தா­வது வரு­டத்தில் ஜனா­தி­ப­தி­யாக இருந்தபோது எதிர்க்­கட்­சிகள் பெரிய போராட்­ட­மொன்றை செய்­தன. அந்த ஆர்ப்­பாட்டம் தான் மகிந்­த­வுக்கு சாத­க­மா­னது.
இன்­றுள்ள நிலை­மை­ வேறு. அப்­படி மக்­களை திரட்டி போரா­டு­வ­தற்கு எதிhக்­கட்­சி­க­ளுக்கு வீரி­ய­மில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தூர நோக்­குடன் இவை­களை அவ­தா­னிக்­கின்­றது. ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சாஸ்­டாங்கம் செய்­கின்ற சேவகம் செய்­வ­தற்கு பார்த்துக் கொண்­டி­ருக்­கின்ற கூட்டம் மாதிரி கதைப்­பதை தவிர்த்துக் கொள்­ள ­வேண்டும்.
அந்­தக் ­க­தை­க­ளினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சர­ணா­காதி அர­சி­ய­லுக்கு தயா­ராகி விட்­டது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஒரு நாட­கத்தை ஆடு­கின்­றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுக்கு பழி சொல்ல பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடகமாடும் கட்சியல்ல. மக்கள் உணர்வுகளோடு பயணித்துத்தான் அதனுடைய இலக்குகளை அடைந்துள்ளது.
சவால்களை சந்திப்பதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar