பொலன்னறுவை - கலஹாகல பகுதியில் மகன் தடியால் தாக்கியதில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இதன் போது 65 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் இவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment