2005 இறுதியாகும் போது இலங்கை யில் 76.7 வீத வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டி ருந்தது. இவ்வாண்டில் அது 97வீதமாகியுள்ளது.
2005ம் ஆண்டில் நாட்டில் 2412 மெகாவாட்ஸ் மின்சாரமே தேசிய மின்கட்டமைப்பில் இருந்தது. அது தற்போது 3363மெகா வாட்ஸாக அதிகரித்துள்ளது.
மின்சக்தி துறையில் புரட்சிகர மாற்றங்களை மேற்கொண்டு கடந்த 9 ஆண்டுகளில் நுரைச்சோலை, மேல்கொத் மலை, கெரவலபிட்டிய ஆகிய மூன்று மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து 1350 மெகாவாட்ஸ் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் சேர்க்கப்பட்டது.
இதன் காரணமாக மஹிந்த சிந்தனை கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள “சகலருக்கும் எந்நேரமும் மின்சாரம்” என்ற வாக்குறுதியை யதார்த்தமாக்கி இலங்கை முழுவதும் 100 வீதம் மின்சாரத்தை துரிதமாக வழங்குவதற்கு ஜனாதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஒன்பது வருடங்களுக்குள் 17 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 2005 ஆண்டில் மின் பாவனையாளர்களின் எண்ணிக்கை 33,96,047 ஆக இருந்தது. அது தற்போது 50,03,789 ஆக அதிகரி த்துள்ளது.
மின்சார உற்பத்தி செலவை குறைக்கும் நோக்குடன் மேல்கொத்மலை நீர்மின்சார நிலையமும், நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையமும், கெரவலபிட்டிய அனல் மின் நிலையமும் நிர்மாணி க்கப்பட்டது.
இதன் பிரகாரம் எரிசக்தி மூலமான மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக வருடாந்தம் செலவிடப்பட்ட கோடிக்கணக்கான ரூபாவை சேமிக்க முடிந்ததோடு, மின்சாரத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மின் பாவனையா ளர்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
25 வீத மின் கட்டண குறைப்பினால் பாவனையாளர்களுக்கு நிவாரணம் கிடைப்பதோடு, மின்சாரத்துறையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் தற்போதைய அரசினால் முடிந்துள்ளது.
எதிர்காலத்தில் எரிசக்தி துறையில் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைமையை தற்காலத்திலேயே கண்டு, அதற்காக நிரந்தர தீர்வை வழங்குவதற்கு 500 மெகாவாட்ஸ் கொண்ட சம்பூர் அனல் மின்சார நிலையத்தையும், 200 மெகாவாட்ஸ் கொண்ட மன்னார் காற்றாலை மின்சார நிலையத்தையும் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையில் மின் உற்பத்தியை மேற்கொள்ளக்கூடிய நீர் மூலகங்கள் அதிகமானவை தற்போது பயன்பாட்டில் உள்ளன.
மின் உற்பத்திக்காக மாற்று வழிகளையும் காண்பதற்கு நேரிட்டுள்ளது.
இதில் மிகவும் இலாபகரமானது நிலக்கரி மின்சார உற்பத்தி நிலையமும் இயற்கை வாயு உற்பத்தி நிலையமும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தற்போது மீள் சுழற்சி மின்சார உற்பத்தி நிலையங்களில் 367 மெகாவாட்ஸ் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்புக்கு இணைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் முழு மின்சார தேவையில் 10 வீதமாகும்.
மேலும் மின் கட்டணம் குறைப்பு
மின் கட்டண குறைப்பு தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியதாவது,
அரசியல் நோக்கத்திற்காக அரசாங்கம் மின் கட்டணத்தை குறைக்கவில்லை. ஏற்கெனவே ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தபடியே கட்டணம் குறைக்கப்பட்டது. எதிர்காலத்தில் மேலும் மின் கட்டணம் குறைக்கப்படும்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத் தினூடாக குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் எதிர்க ¡லத்தில் ஆரம்பிக்கப் பட்டதும் மேலும் கட்டணம் குறைக்க முடியும்.
25 வருடங்களுக்கு தனியார்துறையுடன் மின்சாரம் பெற ஒப்பந்தங்கள் செய்யப் பட்டிருந்தன. அவற்றினூடாக 42 ரூபா முதல் 60 ரூபா வரை ஒரு அலகு கொள்வனவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் நிறைவடைந்து வருகிறது. அவை நீடிக்கப்படமாட்டாது.
மின் கட்டணத்துடன் அறவிடப்படும் எரிபொருள் சீராக்கல் கட்டணத்தில் மாற்றம் செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்படும்.
Post a Comment