BREAKING NEWS

அஹ்லுல் பைத் என்ற பிரிவு

நபியவர்கள் காலத்தில் இயக்கங்கள் பிரிவுகள் இருக்கவில்லை. எனினும் அஹ்லுல் பைத் என்ற பிரிவு மட்டும் இருந்ததாக சிலர் சொல்வது உண்மைக்கு மாற்றமான கூற்றாகும். அஹ்லுல் பைத் என்பது ஒரு பிரிவல்ல.
இது நபிகளாரின் குடும்பம் என்பதை சுட்டிக்காட்டப்பட வைக்கப்பட்ட அடையாள பெயராகும். இதற்குள் அன்னை ஆயிஷா, நபியவர்களின் மாமனார்களான அபு பக்கர், உமர் (ரழி) போன்றவர்களும் உள்ளடங்குகிறார்கள். இவ்வாறான அடையாளப்பெயர்கள் நபியவர்கள் காலத்தில் நபியின் அனுமதியுடன் பல இருந்தன. உதாரணமாக அன்சாரிகள், முஹாஜிர்கள், பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்டோர் என. இவையெல்லாம் வெறும் அடையாளப்பெயர்கள்தானே தவிர பிரிவுகள் அல்ல.
ஆக நமது அமைப்பக்களுக்கு அடையாள பெயர் வைப்பது தப்பில்லை. ஆனால் அவற்றை பிரிவுகளாக பார்ப்பதே தவறாகும். அனைத்து முஸ்லிம்களும் தம்மை ஷீயா சுன்னி, ஷாபி, ஹனபி, தவ்ஹீத், தப்லீக், ஜமாஅத் இஸ்லாமி, ஜமாஅத் முஸ்லிமீன் என அழைத்து பிரிவினையாக காட்ட முன்வரக்கூடாது. தம்மை முஸ்லிம்கள் என்று மட்டுமே அழைக்க வேண்டும். இத்தகைய அமைப்புக்கள் வெறும் அடையாளப்பெயர்களே தவிர இதில் இந்த அமைப்புத்தான் சொர்க்கவாதி என சொல்வது குர்ஆன் ஹதீதுக்கு முற்றிலும் மாறுபாடனதாகும். யாரெல்லாம் ஓரிறைவனை ஏற்று அவனது இறுதித்தூதராக முஹம்மது நபியை ஏற்று இஸ்லாத்தின் ஐங்கடமைகளை ஏற்று நடக்கிறாரோ அவர் சொர்க்கவாதிதான் என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்த அமைப்புக்களுள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரியே.
-முபாறக் அப்துல் மஜீத்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar