BREAKING NEWS

ஜனாதிபதி வேட்பாளராக 10 பேர் கட்டுப்பணம் 2 முஸ்லீம்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனா.

அஷ்ரப் ஏ சமத்

ஜனாதிபதி  வேட்பாளராக 10 பேர் கட்டுப்பணம்
2 முஸ்லீம்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனா.
எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட 9 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழுவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள்
செயலகம் தெரிவிக்கின்றது.   ஜனசெத பெரமுன சார்பில் பத்தரமுல்லே சீலரத்னஇ ஒக்கொம ரஜவரு கட்சியின் சார்பில் எம்.பீ.தெமினிமுல்லேஇ சமாஜவாதி சமனதா கட்சியின் சார்பில் பானி விஜேசிங்க இஎக்சத் சமாஜவாதி கட்சியின் சார்பில் விஜேசிங்க சிறிதுங்கவும் இ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ராஜபக்ஷ பர்ஸி மஹேந்திரவும் இ ஐக்கிய மக்கள் மகாசபா கட்சியின் சார்பில் கலாநிதி நாத் அமரநாத்தும் இ இலங்கை தேசிய முன்னணியின் சார்பில் விமல் கீகனகே இபுதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் பள்ளேவத்தே கமராலகே மைத்திரிபாலஇ சுயேட்சையாக ஐ.எம். இல்யாஸ்இ அரசியல் கட்சியொன்றின் பெயரில்  மௌலவி மிப்லாஹ்ர் ஆகியோரே இத்தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.   இதன்படி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவரை 10 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர். இந்த தேர்தலுக்காக 5 ஆம் திகதி வரை மட்டுமே கட்டுப்பணம் செலுத்த முடியுமென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது -

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar