BREAKING NEWS

தலைவர் அஸ்ரபுக்குப்பின் தேசிய ரீதியலான அமைப்பொன்றின் தலைவர் என்ற வகையில் கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்து கொண்ட ஒரேயொரு மௌலவி, முபாறக் அப்துல் மஜீத்




சஊதியில் உள்ள ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமியினால் பயங்கரவாதத்துக்கெதிரான சர்வதேச மாநாடு அண்மையில் மக்காவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சஊதி அரசின் அழைப்பை ஏற்று இலங்கையிலிருந்து கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ எச் எம் பௌசி, முன்னாள் சபாநாயகர் எம் எச் முஹம்மத், ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு மற்றும் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ஆகியோர் ஜித்தா விமான நிலையத்தின் விசேட விருந்தினர் பகுதியில் வரவேற்கப்படுவதையம் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதையும் படத்தில் காணலாம். மறைந்த தலைவர் அஸ்ரபுக்குப்பின் தேசிய ரீதியலான அமைப்பொன்றின் தலைவர் என்ற வகையில் கிழக்கு மாகாணத்திலிருந்து இத்தகைய சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட ஒரேயொருவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar