உலகில் ஜனநாயகம் நிலவும் நாடுகளில் இவ்வாறு மோசமான முறையில் அரசியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க முடியாது. தாங்களாகத் தயாரித்துவிட்டு, அதனைப் பலவந்தமாகத் திணிக்கின்றார்கள்.
பாராளுமன்றத்தில் 20 ஆவது சட்டத்திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பிரகாரம் கொண்டுவரப்பட்டால் மூன்றில் இரண்டு ஆதரவைப் பெறவிடாமல் நாங்கள் தடுப்போம்.
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் அதற்கு மூன்றில் இரண்டு ஆதரவு கிடைக்க மாட்டதென நாங்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றோமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சூளுரைத்துள்ளார்.

Post a Comment