இலங்கையில் உணவு (ஹலால்) மூலம் அடிப்படை வாதத்தை புகுத்தியவர்கள் வங்கி முறைக்குள்ளும் அடிப்படை வாதத்தைப் புகுத்துக்கிறார்கள் என தெரிவித்து தற்போது புதிய தலைப்பைத் தூக்கிப் பிடித்து தமது செல்வாக்கை உயர்த்த பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளும் பொது பல சேனாவின் வழிகாட்டியான பயங்கரவாதி ஞானசாரவும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திலந்த விதானக உட்பட்ட பரிவாரமும் மத்திய வங்கிக்கு விஜயம் செய்துள்ளது.
அண்மையில் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக வினா எழுப்பியிருந்த ஞானசார அங்கு நேரடியாக சென்று அதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும், ஹலால் உணவுக்கு அடுத்தபடியாக வங்கிகள் ஊடாக அடிப்படைவாதம் புகுத்தப்படுவதாகவும் இதையெல்லாம் பேச மறக்கும் சமூகம் கடந்த ஆட்சியாளர்களின் தவறுகளைத் தூக்கிப் பிடிப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment