மினாவில் ஏற்பட்ட அனர்த்தம் - ஈரானியர்களே காரணம்..?
-Nowfer Mohammad-
இன்று (24) மினாவில் ஏற்பட்ட அனர்தத்துக்கும் அதைத் தொடர்ந்து 700 க்கும் அதிகமான ஹாஜிகளின் வபாதுக்கும் யார் காரனம் என்ற தகவலை "அல் முவாதின்" இணையதளம் சம்பவ இடத்தில் இருந்த நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களை ஆதாரமாக் கொண்டு தகவல் வெளியிட்டுள்ளது.
ஜோர்தான் நாட்டைச் சேர்ந்த முஹம்மத் தறாவினஃ எனும் ஹாஜி சாட்சியமளிகையில் "ஈரான் நாட்டைச் சேர்ந்த ஹாஜிகள் ஹஜ்ஜாஹிகளின் நகர்வை முடக்கும் விதமாக ஒன்று சேர்ந்து கொண்டு அரசியல் கோஷங்களை எழுப்பியதே நெரிசலுக்குக் காரனமாக அமைந்தது" எனக் குறிப்பிட்டார்.
குவைட் நாட்டைச் சேர்ந்த ஹாஜி காலித் அல் ஆஸிமி சாட்சியளிக்கையில்
" ஈரானைச் சேர்ந்த ஹாஜிகள் ஒன்று சேர்ந்து கொண்டு ஹஜ்ஜாஜிகளின் நகர்வை முடக்கி போலீஸார் நெரிசலைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்ததாகவும் தெரிவித்தார்.
மொரோக்கோவைச் சேர்ந்த ஹாஜி முஹம்மத் அப்துஸ் ஸலாம் தெரிவிக்கையில் " 203 மற்றும் 204ம் இலக்க வீதிகளின் சந்தியில் ஈராணியர்கள் ஒன்று திரண்டு கொண்டு ஹாஜிகளின் நகர்வுக்கு ஊறு விளைவித்ததே நெரிசலுக்குக் காரனம் " எனத் தெரிவித்தார்.
நன்றி: அல் முவாதின் இணைய தளம்.
Jaffna muslim

Post a Comment