BREAKING NEWS

சுனாமியின் போது சமூக வலைத்தளங்கள் இல்லாததால், முஸ்லிம்களின் சேவைகள் வெ

ளியே தெரியவில்லை - ஜோதி மணி

சுனாமியின் போது நாகப்பட்டிணத்தில் முதல் கட்ட மீட்புப் பணியில் தீவிரமாக இறங்கிவர்களில் முஸ்லிம்கள் முன்னிலையில் இருந்தனர். வேன் சர்வீசை அவர்கள் நடத்திக்கொண்டிருந்ததால் ஏராளமான உயிர்களை அவர்களால் காப்பாற்ற முடிந்தது. கும்பல் கும்பலாக குவிந்து கிடந்த பிணங்களை அடக்கம் செய்தார்கள்.

அன்று சமூக வலைத்தளங்கள் இல்லாததால் அவ்வளவாக வெளியில் தெரியவில்லை. இன்று சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்களின் மகத்தான சேவை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவ்வளவே .

அதைப் பொறுக்க முடியாமல் ஆர்எஸ்எஸ் -ல் சிலர் பொங்குகின்றனர். மக்கள் வீடு இழந்து ,வாழ்வாதாரத்தை இழந்து ,அரசாலும் கைவிடப்பட்டு நிர்கதியாக நிற்கும் நிலையில் இதெல்லாம் ஒரு பிழைப்பா?

இந்து, முஸ்லிம், ஏழை, பணக்காரன், தமிழ், தெலுங்கு, இந்தியர், வெளிநாட்டவர் எல்லா வேறுபாடுகளையும் மழை அடித்துக்கொண்டு போய்விட்டது.எஞ்சி இருப்பது மனிதநேயம் மட்டுமே!

உங்கள் பிரிவினை அரசியலை யாரும் இனி காதுகொடுத்துக் கேட்கப் போவதில்லை. மழை பலவற்றை அழித்திருக்கிறது.ஆனால் ஒற்றுமையை உருவாக்கியிருக்கிறது.

அதுகூட புரியாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை வம்புக்கு இழுப்பதிலிருந்தே இவர்கள் மனநிலையைப் புரிந்துகொள்ளலாம். நமக்கெல்லாம் நிறைய நிவாரணப் பணிகள் காத்துக்கிடக்கிறது.

இஸ்லாமிய சகோதரர்கள் இந்த அபத்தத்திற்கெல்லாம் பதில்சொல்லி நேரத்தை வீணாக்காமல் தொடர்ந்து சேவையில் ஈடுபடுங்கள்.

- காங்கிரஸ் பிரமுகர் ஜோதி மணி

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar