BREAKING NEWS

அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகால பிரச்சினைகளில் சில

01. பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்காமை.
02.பல வருடங்களாக எந்தவித கொடுப்பனவுகளுமின்றி கற்பித்த தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்படாமை.
03.அதேபோன்று பலவருடங்கள் வைத்தியசாலைகளில் தொண்டர் அடிப்படையில் பணிபுரிவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமை.
04.வெளிமாகாணங்கள்/ மாவட்டங்களில் பல வருடங்களாக பெருந்துயரங்களைச் சுமந்து பணிபுரியும் ஆசிரியர்கள்/ ஏனைய பதவி நிலைகளில் இருப்போருக்கான இடமாற்றங்கள் மறுக்கப்பட்டுள்ளமை.
05.பொத்துவில் காணிப்பிரச்சனை
06.வட்டமடு வயல்காணிகளா/ மேய்ச்சல் தரையா பெரும் பிரச்சனை.
07.ஆலங்குழம் வேளாண்மை செய்யமுடியாமல் கரும்புக்காக மல்லுக்கட்டும் புயலான பிரச்சனை.
08.தீகவாப்பி காணிப்பிரச்சனை.
09.பொத்துவில் குடிநீர் பிரச்சனை.
10. பொத்துவில் உப கல்வி வலையத்தை நிரந்தர கல்வி வலையமாக மாற்றும் பிரச்சனை.
11.பொத்துவிலில் இதுவரை பொது மைதானம் இல்லாத துயரமான பிரச்சனை.
12.மத்திய அரசும் தலையிட வேண்டிய சுனாமி வீட்டுத்திட்டங்கள் வழங்காமை. (கல்முனை, நுரைச்சோலை)
13.மீனவர்களுக்கான கரைவலை, மற்றும் இடப்பிரச்சனை
14.வேளான்மைக்கான நீர்பாஷணம்.
15.நற்பிட்டிமுனைகுடி நீர்பிரச்சனை.
16.சம்மாந்துறை மற்றும் ஏனைய பகுதிகளில் யானைகளின் அட்டகாசம்.
17.மாவட்டத்தில் சில பாடசாலைகளில் ஆசிரியர்களின் ஆளணிப் பற்றாக்குறையுடன் தளபாடப்பிர்ச்சனைகள்.
18.விலை அதிகரித்து இருக்கும் குடி நீர் வசதி எடுக்கவும், மின்சாரம் எடுக்கவும் வசதியின்றி இருக்கும் மக்களுக்கு உதவிகள் வழங்கும் விடையம்.
19.ஒழுங்கான பாதைகள், வடிகான்கள் அமையப்பெறாமல் இருப்பதும், வெள்ளத்தால் மக்கள் அவதிப்படுவது தீர்க்க வேண்டிய பிரச்சனை.
20. யுத்தம் மற்றும் இதர காரணங்களால் கல்வியை இடைநிறுத்தி விட்டு வேலைவாப்புக்களின்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar