BREAKING NEWS

பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்தி இளைஞர்களின் ஆபாச புகைப்படங்கள்

சமூக இணையத்தளங்களை பயன்படுத்தி ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பரிமாற்றிக் கொள்ளும் குழு செயற்பாடு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக ரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்தி யுவதிகளாக முன்னிலையாகி இளைஞர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பெற்று கொள்ளப்படுகின்றன.

பின்னர் காணொளி மற்றும் புகைப்படங்களை பெற்று கொண்டவர்களை அச்சுறுத்தி பணம் பெற்று கொள்ளும் சம்பவங்கள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடு கிடைக்க பெறுவதாக குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறானவர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கணினி அவசர தொழிற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இனந்தெரியாதவர்களுடன் தனிப்பட்ட தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டாம் என அந்த பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar