BREAKING NEWS

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையில் மாற்றம் வரலாம்

.

24ந்திகதி கண்டியில் நடைபெறவிருக்கும் அ. இ. ஜம்இய்யத்துல் உலமாவின் பிராந்திய பதவி தாங்குணர்களின் கூட்டத்தில் புதிய தலைவர் தெரிவு செய்யப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. தற்போதைய தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் சுமார் 20 வருடங்களாக தலைமை பதவியில் இருக்கின்றார். அவர் தலைவரான பின் பொருளாதார விடயத்தில் வளம் உலமா சபை கணிசமான முன்னேற்றத்தை கண்டிருந்தாலும் மார்க்க விடயங்கள் பலவற்றில் பின்னடைவு எற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டக்கள் உள்ளன. அத்துடன் ஜம்இய்யதுல் உலமா நிர்வாகத்திலும் நிர்வாக தெரிவிலும் ஜனநாயக தன்மை இல்லை என்றும் சர்வாதிகார முi-றமை உள்ளதாகவும், ஒரு சிலரின் கைப்பொம்மையாக தலைமை நிர்வாகம் உள்ளதாகவும் விமர்சனங்கள் உள்ளன.

அதே வேளை கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற உலமா சபையின் உயர் அங்கத்தவர்கள் மத்தியில் உரையாற்றிய ரிஷ்வி முப்தி அவர்கள் இனிமேல் தான் தொடர்நதும் தலைவராக இருக்க விரும்பவில்லை என்றும் அடுத்த பொதுக்;கூட்டத்தில் தன்னை தெரிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளதாக அதில் கலந்து கொண்ட மௌலவி ஒருவர் அல்ஜஸீறா லங்காவுக்கு தெரிவித்தார்.

அதன் போது நீங்கள் வழமையாக இவ்வாறு தான் தெரிவிப்பீர்கள் என்றும் ஆனால் தலைi-மயில் மாற்றம் ஏற்பட அனுமதிப்பதில்லை என்றும் இம்முறையும் வழமை போன்று நடக்குமா என மௌலவி ஒருவர் கேட்ட போது இனி அவ்வாறு நடக்காது என தலைவர் ரிஸ்வி முபதி தெரிவித்ததாகவும் அதனை பலரும் வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையில் மாற்றம் வர வேண்டும் என்பதே தற்போதைய தலைமையை காக்காய் பிடிக்காத உலமாக்களின் கருத்தாக உள்ளது என அறிய முடிகிறது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar