BREAKING NEWS

அலப்போ முஸ்லிம்களுக்காக நாம் பிரார்த்திக்க வேண்டும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்



 

சிரியாவின் அலப்போ பிராந்தியத்தில் உக்கிரம் அடைந்துள்ள போரில் சிக்கித்தவிக்கும் மக்களையும் குறிப்பாக குழந்தைகைளையும் பார்க்கும் போது வேதனை தாங்க முடியவில்லை என மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டுப்போரினால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான அலப்போ மக்களுக்கு இந்த துயர சம்பவத்தில் நாம் நமது பிரார்த்தனைகளின் மூலம் நிச்சயம் பங்கெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முஸ்லிம்களாகிய நாம் ஐவேளை தொழுகையிலும் குறிப்பாக தஹஜ்ஜுத் தொழுகையிலும் இச் சம்பவங்களை தாங்கும் மனதையும், இவ் யுத்தத்தை எதிர்கொள்ளும் தைரியத்தையும், மரணித்தவர்களுக்கு ஷுஹதாக்களின் அந்தஸ்தும் வழங்க இறைவனிடம் இரு கரமேந்தி அம்மக்களுக்காக நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் இரஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar