BREAKING NEWS

பல சேனா உறுப்பினர்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை

ஹம்பாந்தோட்டையில் பொலிஸ் தடையை மீறி ஆர்பாட்டம் செய்த பொது மக்களை பௌத்த பிக்குகள் மீதும் தாக்குதல் நடத்தி நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்பாட்டம் செய்தமைக்காக கைதுசெய்த நல்லாட்சி நீதிமன்ற உத்தரவை மீறி மட்டக்களப்பு நகருக்குள் சென்ற பொது பல சேனா உறுப்பினர்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என பேருவளை நகர சபை முன்னாள் தலைவர் மில்பர் கபூர் கேள்வி
எழுப்பியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..

தங்களது பூர்வீக காணிகளை பாதுகாத்துகொள்ள ஹம்பாந்தோட்டையில் பொலிஸ் தடையை மீறி ஆர்பாட்டம் செய்த பொது மக்களை பௌத்த பிக்குகள் மீதும் தாக்குதல் நடத்தி நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்பாட்டம் செய்தமைக்காக அப்பிரதேசவாசிகளை கைதுசெய்த நல்லாட்சி நீதிமன்ற உத்தரவை மீறி மட்டக்களப்பு நகருக்குள் சென்ற பொது பல சேனா உறுப்பினர்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த அரசாங்காத்துக்கு எதிராக கோஷம் எழுப்புபவரகள் தேரர்களாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் இந்த நல்லாட்சி என்ற பெயரளவு அரசு சட்ட நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் இந்த ஆட்சியை கொண்டுவர பாடுபட்ட முஸ்லிம் சமூக பிரச்சினைகளில் மட்டும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் அசமந்தமாக செயற்பட்டு வருகிறது.

இந்த நல்லாட்சியில் முஸ்லீம்களுக்கு எதிராக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எதற்க்கு நடவடிக்கை இல்லை. மல்லிகாஸ் பெசன் பக் நிறுவனங்கள் எரிக்கப்பட்டன. இதுவரை எந்த விசாரனையும் இடம்பெறவில்லை ஆகக் குறைந்தது அரச ரசாயன பகுப்பாய்வு அறிக்கையை கூட இந்த அரசு பெற்றுக்கொடுக்கவில்லை .

அவர்களுக்கு வந்தால் அது ரத்தம் எமக்கு வந்தால் அது தக்காளி சட்னியா என நாம் இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar