BREAKING NEWS

உல‌மாக்க‌ள் த‌விர்ந்த‌வ‌ர்க‌ள் இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ திட்ட‌ங்க‌ள் ப‌ற்றி விவாதிப்ப‌தை நிறுத்திக்கொள்ள‌ வேண்டும்

குர் ஆன் ஹ‌தீத் அறிவுள்ள‌ உல‌மாக்க‌ள் த‌விர்ந்த‌வ‌ர்க‌ள் இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ திட்ட‌ங்க‌ள் ப‌ற்றி ச‌மூக‌ வ‌லைய‌த்த‌ள‌ங்க‌ளில் விவாதிப்ப‌தை நிறுத்திக்கொள்ள‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து.
இது ப‌ற்றி அக்க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்த‌தாவ‌து

ச‌மூக‌ வ‌லைய‌த்த‌ள‌ங்க‌ளில் இஸ்லாம் ப‌ற்றி எழுதும் ப‌ல‌ர் த‌ங்க‌ள‌து ச‌ராச‌ரி ம‌னித‌ அறிவை வைத்து ம‌ட்டுமே இஸ்லாத்தை நிறுத்துப்பார்க்கிறார்க‌ள். அத‌ன்ப‌டி எழுதுகிறார்க‌ள்.
இஸ்லாம் ம‌னித‌னால் க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட்ட‌ மார்க்க‌ம் அல்ல‌ என்ப‌தை இவ‌ர்கள் தெளிவாக‌ முத‌லில் தெரிந்து கொள்ள‌ வேண்டும். இஸ்லாம் சொல்லும் சில‌ விட‌ய‌ம் ம‌னித‌ர்க‌ளுக்கு எளிதில் புரிந்து விடாது. அது புரிய‌ சில‌ நூற்றாண்டுக‌ள் கூட‌ எடுக்க‌லாம்.
இரும்பின் துணை கொண்டு ச‌ந்திர‌ம‌ண்ட‌ல‌ம் போக‌லாம் என்ப‌தை 1400 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் சொன்ன‌ போது அப்போதிருந்த‌ ம‌க்க‌ளின் ம‌னோ நிலையை சிந்தித்து பாருங்க‌ள்.  குர் ஆன் சொல்வ‌து ஏதோ பைத்திய‌ம் என்றுதான் ம‌னித‌ன் நினைத்திருப்பான்.
க‌த்னா செய்வ‌த‌ன் மூல‌ம் எயிட்ஸ் வ‌ராது என்ப‌தை அன்று சொல்லியிருந்தால் எயிட்ஸ் கிலோ என்ன‌ விலை என்று கேட்டிருப்பான்.

ஆனால் அந்த‌ அற‌பு ம‌க்க‌ள் த‌ம‌க்கு குர் ஆனின் விஞ்ஞான‌ம் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ க‌ருத்துக்க‌ள் புரியாத‌ போதும் இறைவ‌ன் சொல்லி விட்டான், ந‌பிய‌வ‌ர்க‌ள் சொல்லி விட்டார்க‌ள் என்ற‌ ஒரே கார‌ண‌த்துக்காக‌ அவ‌ற்றை த‌லையில் தூக்கிச்சும‌ந்து ந‌ம்மிட‌ம் கொண்டு வ‌ந்து த‌ந்துள்ள‌ன‌ர். இந்த‌ ஒரு விட‌ய‌த்துக்காக‌ அற‌பு ம‌க்க‌ளுக்கு நாம் அடிமைச்சேவ‌க‌ம் செய்ய‌லாம்.

இஸ்லாம் ப‌குத்த‌றிவுக்கு எதிரான‌ மார்க்க‌ம் அல்ல‌. ஆனால் அனைத்தையும் ப‌குத்த‌றிவு மூல‌ம் புரிந்து கொள்ள‌வும் முடியாது. இத‌னால்தான் அலி ர‌ழிய‌ள்ளாஹு அன்ஹு சொன்னார்க‌ள். ஒரு ம‌னித‌ன் த‌ன‌து ச‌ப்பாத்துட‌ன் வுழு செய்யும் போது ச‌ப்பாத்தின் கீழ் ப‌குதியை த‌ண்ணீரால் த‌ட‌வுவ‌தே ம‌னித‌னின் புத்திக்கு ஏற்ற‌ செய‌லாகும். ஆனால் இஸ்லாம் இறை வேத‌ம் என்ப‌தால் ச‌ப்பாத்தின் மேல் ப‌குதியில் நீரால் த‌ட‌வும் ப‌டி சொல்லியுள்ள‌து என்றார்க‌ள். புத்திக்கு ப‌டாத‌ இத‌னை அள்ளாஹ்வும் ர‌சூலும் சொன்னார்க‌ள் என்ப‌த‌ற்காக‌ அப்ப‌டியே செய்கிறோம்.

பெண்க‌ளுக்கான‌ க‌த்னா என்ப‌து அந்நாளில் இருந்த‌ ம‌னித‌ர்க‌ளின் வெறும் க‌லாசார‌ வ‌ழ‌க்க‌ம் அல்ல‌. எப்ப‌டி ஆண்க‌ளுக்கான‌ க‌த்னா என்ப‌து முஹ‌ம்ம‌து ந‌பி பிற‌க்கு முன் ஐயாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன் வாழ்ந்த‌ முஸ்லிமான‌ இப்ராஹீம் ந‌பியினால் காட்ட‌ப்ப‌ட்ட‌ வ‌ழ‌க்க‌மாக‌ இருந்த‌து என்ப‌தை ஹ‌தீதுக‌ள் சொல்கின்ற‌ன‌. அதே போல் பெண் க‌த்னாவை ஊக்குவிக்கும் ச‌ஹீஹான‌ ஹ‌தீதுக‌ள் உள்ள‌ன‌. குர் ஆனை ஹ‌தீதை அற‌பு மொழியில் வாசித்து புரிய‌ முடியாத‌ சில‌ர்  அவ‌ற்றை பார்க்காது த‌ம் சிற்ற‌றிவுக்குள் வைத்து இத‌னை சிந்திக்கிறார்க‌ள்.
இது போன்று ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் உள்ள‌ன‌.

இவ‌ற்றை முழுமையாக‌ த‌விர்த்து மார்க்க‌த்தை அத‌ன் அடிப்ப‌டையான‌ குர் ஆன் ஹ‌தீதிலிருந்து விள‌ங்க‌ வேண்டும் என்றும் விள‌ங்காதோர் இறைவ‌னுக்கு ச‌ர‌ண‌டைத‌லுட‌ன் நின்று கொள்ள‌ வேண்டும் என‌ கேட்டுக்கொள்கிறோம். உங்க‌ளுக்கு இப்போது புரியாத‌வை இன்னும் ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ள் பின் வ‌ரும் ம‌னுத‌னுக்கு புரிய‌ வ‌ரும்.
ஆக‌வே உல‌மாக்க‌ள் அல்லாத‌வ‌ர்க‌ள் ச‌மூக‌ வ‌லைய்த்த‌ள‌ங்க‌ளில் த‌ம் இஷ்ட‌ப்ப‌டி இஸ்லாம் ப‌ற்றி பேசி தாமே அவ‌ற்றுக்கு தீர்ப்பு வ‌ழ‌ங்கி, த‌ம‌து அறிவின் நிலையில் உள்ள‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் சொல்லி அவ‌ற்றுக்கு லைக் வாங்கிவிட்டான் த‌ம் க‌ருத்து ச‌ரி என‌ நினைத்துக்கொள்ளும் ம‌ன‌ நோயிலிருந்து விடு ப‌ட‌ வேண்டும் என‌ அர‌சிய‌ல் ம‌ற்றும் மார்க்க‌ம் என்ப‌வ‌ற்றை இரு க‌ண்க‌ளாக‌க்கொண்ட‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி
முஸ்லிம் உல‌மா க‌ட்சி

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar