உள்ளுராட்சி சபைத் தேர்தலைஎதிர்வரும் நவம்பர் மாதம் இறுதிவாரத்தில் நடாத்துவதற்கு கட்சித்தலைவர்கள் உடன்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
நேற்று 16 ஆம் திகதி மாலை அலரிமாளிகையில் பிரதமர் தலைமையில்இடம்பெற்ற கட்சித் தலைவர்களிடையேஇடம்பெற்ற கலந்துரையாடலின் போதுஇந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் தேர்தல்கள்ஆணைக்குழு மற்றும் சட்ட மா அதிபர்திணைக்களம் என்பவற்றின்அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளதாகஅரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இத் தேர்தலில் உறுப்பினர் தெரிவானது 60 வீதம் தொகுதிவாரி முறையிலும், 40 வீதம் விகிதாசார முறையிலும் இடம்பெறுவதற்கும் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.
Post a Comment