ஈராக்கில் சத்தாம் ஹுசைன் காலத்தில் ஈராக்கை எதிர்த்து போராடிய குர்திஸ்த்தான் போராளிகளை மூர்க்கமாக அடக்கினார். இதன் காரணமாக குர்திஸ்கள் தமக்கு உதவும்படி அமெரிக்காவை கேட்டனர்.
சந்தர்ப்பம் பார்த்திருந்த அமெரிக்கா இதனையும் ஒரு காரணமாக வைத்து ஈராக்கில் புகுந்து சத்தாமை கொன்று அந்நாட்டை சின்னாபின்னமாக்கியது.
குர்திஸ் போராளிகளும் பலம் பெற்றனர். இவர்கள் பகுதியிலும் பல எண்ணைக்கிணறுகள் இருக்கின்றன.
அத்துடன் ஈராக் படைகளும் குர்திஸ் படைகளும் இணைந்தே ஐ எஸ் ஐ எஸ்ஸை ஒழித்துக்கட்டினர்.
இப்போது ஈராக்கிய படைகள் குர்திஸ் பகுதியின் எண்ணைக்கிணறுகள் உள்ள கிர்குக் பகுதியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதனால் குர்திஸ் படைகளுக்கும் ஈராக் படைகளுக்குமிடையில் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
- முபாறக் அப்துல் மஜீத்
அல்ஜஸீறா லங்கா.

Post a Comment