BREAKING NEWS

பைசல் காசீம் தலைமையில் உலக சுகாதார அமைப்பின் மாநாடு


=====================================
உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் 71 ஆவது உயர்மட்ட மாநாடு ஜூலை மாதம் 30 ஆம் திகதி இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீமின் தலைமையில் தொடக்கி வைக்கப்பட்டது.
இந்த மாதம் இரண்டாம் திகதி வரை நான்கு நாட்களுக்கு இடம்பெறும் இந்த மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகள் எதிர்நோக்கி வரும் சுகாதார சவால்கள் மற்றும் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நாடுகள் எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கான பல தீர்மானங்கள் இம்மாநாட்டின் இறுதியில் எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் பைசல் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பல நாடுகள் கலந்துகொண்டிருக்கும் இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு பிரதி அமைச்சர் பைசல் காசிமுக்கு வழங்கப்பட்டிருக்கின்றமை இலங்கைக்கு பெருமை சேர்க்கும் விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.

[ பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு ]

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar