அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவுக் கட்டணங்கள் ஏப்ரல் முதல் அதிகரிப்பு
( மினுவாங்கொடை நிருபர் )
அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன நெரிசல் மிக்க நேரங்களின் போது, அதிவேகப் பாதைகளின் நுழைவுக் கட்டணத்தை 100 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண அதிகரிப்பு, 2019 ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்குக்கு வரும் வகையில் நடைமுறைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலைகள் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment