நாடு யுத்தத்திலிருந்து மீண்ட வெற்றியை முன்னிட்டு நாட்டுக்காக போராடியவர்களை நினைவு கூருமுகமாகவும் நாட்டுக்கு நிலையான சமாதானத்தையும் வேண்டி களனி வித்யாலங்கார மண்டபத்தில் சர்வ சமய தலைவர்களால் பல்சமய வைபவம் நடாத்தப்பட்டது. இதன் போது பேராசிரியர் கும்புருகமுவே வஜிர ஹிமி, கலகம தம்மரஞ்சி ஹிமி, பாதிரி சரத்ஹெட்டி ஆராச்சி, மௌலவி முபாறக் அப்துல் மஜீத், செய்யத் ஹசன் மௌலானா, சிவசிறி சுப்ரமணிய குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.