தாய்வானின் ஆளும் கட்சியான குவோமின்டங் கட்சியின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வேளை நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கலகத் தடுப்பு பொலிஸார் மீது பாதணிகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சாலையொன்று மூடப்பட்டதால் வேலையை இழந்தவர்களும் எதிர்க்கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் ஆதரவாளர்களும் பங்கு பற்றியிருந்தனர்.
அவர்கள் ஜனாதிபதியும் ஆளுங்கட்சி தலைவருமான மா யிங்– ஜியோயு பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பியபடி பொலிஸார் மீது பாதணிகளை வீசியுள்ளனர்.
இதன் போது ஆளுங் கட்சி கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்கு வெளியேயுள்ள தடுப்பு வேலியில் ஏறிய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.