இலங்கை – மலேசியா இரு நாடுகளுக்குமிடையில் முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்த, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவின் அண்மைய மலேசிய விஜயத்தின் போதே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, ஜனாதிபதியின் விசேட பிரதி நிதியாக, கடந்த வாரம் மலேசியா- கோலாலம்பூரில் இடம் பெற்ற நான்காவது மலேசிய தேசிய மாநாட்டில் கலந்து கொண்டார்.
மாலைதீவுக்கான பிரதமரும், (ருஆNழு) மாநாட்டின் தலைவருமான சிறி மொஹ்ட் நஜீப் துன் அப்துல் ரஸாக் (ளுசi ஆழான யேதiடி வுரn யுடினரட சுயணயம) இந்த மாநாட்டை ஆரம்பித்துவைத்தார். இந்த மாநாட்டின்போது , பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கும், மலேசிய முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் வை. பி. டாதுக் ஐ. ஆர். ஹமிம் சாமுரி ( லு டீ னுயவரம ஐ சு ர்யஅiஅ ளுயஅரசi ) க்குமிடையில், இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாக மிக நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
சுற்றுலாத்துறை, அடிப்படை வசதிகள், நகர அபிவிருத்தி மற்றும் இரு நாடுகளுக்குமிடையில்; விமானப் போக்குவரத்துச் சேவைகளை நடாத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன், பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, மலேசியப் பிரதியமைச்சர் ஹமிமுக்கு, இலங்கை வருமாறும் அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட மலேசியப் பிரதியமைச்சர், இலங்கையிலுள்ள வர்த்தகச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டுத்துறையில் ஆர்வம் கொண்ட பிரதிநிதிகளைச் சந்திப்பதாகவும் உறுதியளித்தார்.
பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, மலேசிய-இலங்கை வர்த்தகக் கவுன்சிலின் தலைவர், டயலொக் நிறுவனத் தலைவர், அக்ஸியாட்டா (யுஒயைவய) குறூப் நிறுவனத் தலைவர் மற்றும் முதலீட்டுத் துறையில் மிகப் பிரபல்யம் பெற்ற பிரதி நிதிகள் பலரையும் இம்மாநாட்டில் சந்தித்து உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(படமும் தகவலும்:- ஐ. ஏ. காதிர் கான்)
