கல்முனை மாநகர அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர்- சட்ட முதுமானி நிஸாம் காரியப்பரிடம் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம். வலீத் குறித்த கணனி உபகரணத் தொகுதியைக் கையளித்தார்.
அத்துடன் மேற்படி விசேட திட்டம் தொடர்பில் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் விளக்கமளித்ததுடன் இது விடயத்தில் ஆசிய மன்றம் மேற்கொள்ளவுள்ள பங்களிப்புகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் எம்.சாலிதீன், பொறியியலாளர் ஏ.எச்.ஹலீம் ஜௌசி ஆகியோருடன் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இதே ஆசிய மன்றம் முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் காலத்திலும் இப்படியான செய்திகளையும் புகைப்படங்களையும் ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்கள். இவர்கள் கல்முனை மாநகர சபை மூலம் மக்களுக்கு உதவுகிறார்களா அல்லது அதனை சேவை செய்வதாக உரியவர்களுக்கு காட்டி சிலரின் பைகள் நிரம்புகின்றனவா என்பவை இன்னமும் மூடுமந்திரமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.