BREAKING NEWS

பௌத்த பீடத்தின் உதவியை நாடும் சஜித்



(vi) ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­துவ சபை நன்­மை­யா­னதும் செயற்றிறன் மிக்­க­து­மென பௌத்த பீடம் ஏற்­றுக்­கொள்­ளு­மே­யானால் மாத்­தி­ரமே தலை­மைத்­துவ சபையில் இணைந்து செய­லாற்­றுவேன் என்று ஐ. தே. க. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்­துள்ளார். 
கட்சி ஆத­ர­வா­ளர்­களை சந்­தோ­ஷத்­திற்கு உள்­ளாக்கும் நோக்­குடன் போலி­யான மறு­சீ­ர­மைப்­புக்­களை செய்­வதால் கட்சி இன்னும் தோல்­வியை நோக்­கியே செல்லும் எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­துவ சபையில் ஆரம்­பத்தில் நிய­மிக்­கப்­பட்­டதன் பிற்­பாடு தலை­மைத்­துவ சபை­யி­லி­ருந்து நான் வில­கிய போது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் எனக்­கெ­தி­ராக முன்­வைக்­கப்­பட்­டன.
இந்­நி­லையில் அன்­றி­ருந்த முடி­வினை மீள்­ப­ரி­சீ­லனை செய்வ­தை காலத்­திற்கு உகந்­தது என்றே நம்­பு­கிறேன்.
இதே­வேளை 65 வருட பழை­மை­யான ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்பின் படி அதி­கா­ர­மிக்க தலை­வ­ரொ­ருவர் இருக்­கையில் குறித்த தலை­வரின் அதி­கா­ரத்தை மீறிய சபை­யொன்று தேவை­யற்­றது என்றே நான் எண்­ணு­கிறேன். இவ்­வாறான செயற்­பாட்டினால் கடந்த தேர்தல்­களில் தோல்வி­ய­டைந்­தது போன்று கட்சி மீளவும் தோல்­வியை நோக்­கியே செல்லும் இதனால் கட்சி செயற்­றி­ற­னற்ற நிலை­மைக்கு தள்­ளப்­படும்.
இந்­நி­லையில் கட்­சியின் நிலை­மை­களை சீர் செய்­வ­தற்­காக பௌத்த சங்க பீடம் தலை­யிட்­டமை நன்மை பயப்­ப­தா­கவே நான் கரு­து­கின்றேன். இத­னூ­டாக பிள­வ­டைந்­துள்ள கட்சி ஒன்­றி­ணைவதே ஆத­ர­வா­ளர்­களின் அபி­லா­ஷை­யாகவுள்ளது. கட்சி தொடர்ச்­சி­யாக தேர்­தல்­களில் தோல்­வி­களை சந்­தித்­து­வரும் நிலை­யி­லேயே மேற்­படி தலை­மைத்­துவ சபை உரு­வாக்­கப்­பட்­டது. எமது கட்­சியை வெற்­றிப்­பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமாயின் அனைத்து அதி­கா­ரத்­தையும் உள்­ள­டக்­கிய தலை­மைத்­துவ சபையே தேவைப்­ப­டு­கி­றது.
இத் ­த­று­வாயில் பெளத்த சங்க பீடத்தின் முன்­னி­லையில் நானும் கரு ஜய­சூ­ரி­யவும் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கையை மீறியே 4 ஆம் திகதி தலை­மைத்­துவ சபை உரு­வாக்­கப்­பட்­டது. அவற்றில் முக்­கிய விட­யங்கள் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மேற்­படி தலை­மைத்­துவ சபையில் இணைந்து எவ்­வாறு செய­லாற்ற முடியும் இதனால் நாங்கள் பொறுப்­புடன் செயற்­பட்­டா­லேயே கட்சி ஆத­ர­வா­ளர்கள் மற்றும் மக்கள் ஏமாற்­ற­ம­டை­வ­தனை தடுக்க முடியும். இந்­நி­லையில், மக்­களை சந்­தோ­ஷப்­ப­டுத்­து­வ­தற்­காக செயற்­பட்டால் கட்சி தோல்வி அடை­வதை தடுக்க முடி­யாது ஆகையால் மக்­க­ளுக்கு துரோக மிழைக்­காமல் சரி­யான மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்­து­வதே தேவை­யா­க­வுள்­ளது.
தற்­போது சர்­வா­தி­கார போக்­குடன் செயற்­படும் மோச­டி­மிக்க இவ்­வ­ர­சாங்­கத்தின் செயற்­பாட்டை கடந்த மாகாண சபை தேர்­தலின் போது மக்­க­ளிடம் எடுத்­துச்­சென்று குறித்த தேர்­தலின் வெற்­றிக்­காக முயற்சி எடுத்தமையை எவரும் மறக்க முடியாது.
இந்நிலையில் கட்சியை தோல்வியி லிருந்து மீட்பதற்காக பௌத்த சங்க பீடம் பெரும் முயற்சி எடுத்து வரும் நிலையில் சங்க பீடம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபையை ஏற்றுக் கொள்ளுமேயானால் தான் நிச்சயமாக தலைமைத்துவ சபையில் இணைந்து செயலாற்றுவேன் என்றார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar