கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம்
சென்ற 28.01.2014 திகதி மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீட் அவர்களின்
தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட
தீர்மானங்களை கிழக்கு மாகாண அமைச்சரவையின் பேச்சாளரும், வீதி அபிவிருத்தி
அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் பத்திரிகையாளர் மகா நாட்டில்
வெளியிட்டார் அத்தீர்மானங்கள் பின் வருமாறு.
01. கிழக்கு மாகாணம் சார்பாக தேசிய, மாகாண
மட்டத்தில் பங்குபற்றும் வீர, வீராங்கனைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளின்
போது ஏற்படும் விபத்துக்களுக்கு வைத்திய செலவுக் கொடுப்பனவும்,
ஊக்குவிப்புக் கொடுப்பனவும் வழங்குவதற்கான அனுமதியினை பெற கிழக்கு மாகாண
சுகாதார அமைச்சர் எம்.ஐ.மன்சூர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப்
பத்திரத்தை ஆராய்ந்த அமைச்சரவை வாரியம் தனது அனுமதியை வழங்கியது.
02. பாடசாலைகளில் ஒப்பந்த / நிவாரண
அடிப்படையில் கடமை புரிகின்ற கல்வி சாரா சிற்றூழியர்களை நிரந்தரமாக்குதல்
தொடர்பான விடயம் சம்மந்தமாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர
திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய்ந்த
அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியது.
03. கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில்
பற்றாக்குறையாக உள்ள விஞ்ஞான, கணித பாட ஆசிரியர்களின் வெற்றிடத்திற்கு
ஆசிரிய உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்
விமலவீர திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை
ஆராய்ந்த அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியது.
04. 2009 ம் ஆண்டு 02 ம் இலக்கமுடைய
கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏ நியதிச் சட்டப்
பகுதியின் 36(2) ஆம் பிரிவு மற்றும் 36(2) ஆம் பிரிவின் (அ) ஆவது
திருத்தம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்
விமலவீர திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஆராய்ந்த
அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியது.
05.கிழக்கு மாகாண தொழிற்துறைத்
திணைக்களத்தின் பயிற்றுவிப்பாளர், பயிலுனர் ஆகியோரின் நாளாந்த கொடுப்பனவை
அதிகரிப்பது சம்மந்தமாக அதாவது தொழிற்துறைத் திணைக்களத்தின் பயிலுனர்களின்
நாளாந்த கொடுப்பனவை 450 இல் இருந்து 750 ஆகவும் அதிகரிப்பதற்கு கிழக்கு
மாகாண விவசாய அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட
அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை
வழங்கியது.
06. அல்கெம் ஹெனி மெட்டல் (தனியார்)
நிறுவனத்தினரிடம் நீண்ட கால குத்தகை அடிப்படையில் மட்டக்களப்பு வாகரை
பிரதேச செயலக கோட்டத்தில் காணி 3.4245 ர் பரப்புடைய காணியை வழங்குவதற்கான
அமைச்சரவைப் பத்திரத்தை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க
அவர்களினால் முன்வைக்கப்பட்டது. இதனை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கான
அங்கீகாரத்தை வழங்கியது.
07. மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் சிறு
கைத்தொழில் பேட்டை நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தல் தொடர்பான கிழக்கு மாகாண
விவசாய அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப்
பத்திரத்தை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.
08. சிறுவர் பராமரிப்பு திணைக்கள நன்னடத்தை
உத்தியோகத்தர்களின் கடமைகளை சுமார் 8 வருடங்களுக்கு மேலாக மேற்கொண்டு
வரும் நிகழ்ச்சி திட்ட / அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நன்னடத்தை
உத்தியோகத்தர்களாக பதவி மாற்றுமாறு தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.மன்சூர் அவர்களினால்
சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கான
அங்கீகாரத்தை வழங்கியது.
09. திருகோணமலை கடற்கரைப் பகுதிகளில் 207
கரை வலைப்பாடுகளுக்காக காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் குறுகிய கால குத்தகை
அடிப்படையிலான அனுமதிப்பததிரம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்துள்ளது.
1985.02.21 ந் திகதி அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கரை
வலைப்பாடுகளுக்காக இது வரைக் காலம் முன்னூறு ரூபாய் (300) அறிவிடப்பட்டு
வந்தது. மேற்படி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு ஏறத்தாழ 03 தசாப்தங்கள்
கடந்துள்ள நிலையில் தற்காலத்துக்கு பொருத்தமான வகையில் ஒரு கரை
வலைப்பாட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் (2000) வரை குறைந்தபட்ச வருடாந்த
அனுமதிப்பத்திரக் கட்டணமாக திருத்தம் செய்வதற்கு கிழக்கு மாகாண கல்வி
அமைச்சரால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை
ஆராய்ந்த அமைச்சரவை வாரியம் தனது அனுமதியினை வழங்கியது.
10. அரசுக்கு சொந்தமான 03 ஏக்கர் காணியை
இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் 13 வது திருத்தச்சட்டத்தின் பிரகாரம்
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பீகொக் பார்க் பீச் ஹோட்டல்
(தனியார்) நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவது தொடர்பாக
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திசாநாயக்கவினால் அமைச்சரவைக்கு
சமர்ப்pக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கான
அனுமதியை வழங்கியது.
11. அம்பாறை மாவட்டத்தில்
UNOPS திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 376.02 KM தூரமான வீதிகள்
புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம்
செய்யப்பட்ட அனைத்து வீதிகளும் நீண்ட காலமாக உள்ளுராட்சி மன்றங்களினால்
பராமரிப்பு இன்றி சேதமடைந்த நிலையில் பொதுமக்களின் பாவனைக்கு ஒவ்வாத
நிலையில் காணப்படுகின்றன.
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு
கூட்டங்களில் இவ்வீதிகள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் முறையிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சபைக் கூட்டங்களின் போதும் மக்கள் பிரதிநிதிகளினால் இது
தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வீதிகளை பராமரிப்பதற்கு
தம்மிடம் நிதி இல்லை எனவும் தங்களால் இவ்வீதிகளை பராமரிக்க முடியாது எனவும்
உள்ளுராட்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பல கோடி ரூபாய் நிதி
ஒதுக்கீட்டின் மூலம் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இவ்வீதிகள் மேலும்
செதமடைவதை தவிர்க்கவும், பொது மக்களின் பாவனைக்கு உகந்ததாக மாற்றி
அமைக்கும் பொருட்டு அமபாறை மாவட்டத்தில் UNOPS திட்டத்தின் கீழ்
புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள 420 KM தூரமுள்ள
வீதிகளை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களம் பொறுப்பேற்பதாக
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால்
சமர்ப்பிக்கப்பட்ட அமமைச்சரவைப் பத்திரத்தை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கான
அங்கீகாரத்தை வழங்கியது.
12. கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினாலும்,
இயற்கை அனர்த்தத்தினாலும் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த கிராமிய வீதிகள்
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் JICA திட்டத்தின் கீழ்
360.816 KM தூரமான வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு கட்டம் கட்டமாக மக்கள்
பாவனைக்காக கையளிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வீதிகளை எதிர்காலத்தில் சேதமடையாமல்
அவ்வப்போது பராமரிப்புச் செய்வதற்கு உள்ளுராட்சி நிறுவனங்களிடம் நிதி வசதி
இல்லை என தெரிவிக்கின்றனர். பல கோடி நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிழக்கு
மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீதிகளை பராமரிப்பதற்கு கிழக்கு மாகாண
வீதி அபிவிருத்தி திணைக்களம் பொறுப்பேற்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள்
கோரிக்கை விடுக்கின்றனர்.
எனவே, JICA திட்டத்தின் கீழ் கிழக்கு
மாகாணத்தில் நிர்மாணக்கப்பட்ட 360.815 KM தூர வீதிகளை பராமரிப்பதற்கு
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் பொறுப்பேற்பதற்கு அமைச்சரவைப்
பத்திரத்தை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை
அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய்ந்த அமைச்சரவை
அதற்கான அங்கீகாரத்தை வழங்கியது.