தெஹிவளை முஸ்லிம்கள் மற்றும் அப்பகுதிகளில் இயங்கும் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகளினால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைக்கு எதிராக இறை உதவியை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நாளை திங்கட்கிழம நோன்பு நோற்குமாறு தெஹிவளை பள்ளிவாசல் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தெஹிவளை முஸ்லிம்கள், தெஹிவளை முஸ்லிம்களின் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ள முஸ்லிம் உறவுகள், வெளி நாடுகளிலுள்ள இலங்கை முஸ்லிம்களும் இந்த நோன்பை நோற்குமாறும் சம்மேளனம் கேட்டுள்ளது.
அதேவேளை தெஹிவளை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நாளை இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அந்த சம்மேளனம் அறிவித்துள்ளது..