உழைப்பாளரை கௌரவிக்கும் மே தின நிகழ்வுகளை அநேக கட்சிகளும் தொழிற்ச்சங்கங்களும் தலைநகரை மையப்படுத்தி நடத்தி இருந்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சி தனது மே தின ஊர்வலத்தையும்
பொதுக்கூட்டத்தையும் தலைநகருக்கு வெளியே அதாவது முதன்முறையாக அம்பாறை நகரில் ஏற்பாடு செய்திருந்தது.
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் மாகாணசபை உறுப்பினர் தயா கமகே அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன்றைய மே தின நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக அக்கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜெயாசூரிய அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.