BREAKING NEWS

முஸ்லிம்களின் அரசியல் பிற்போக்கு- கல்முனை தாசன்

சமூகம் எதிர் நோக்கும் இந்தப்பிரச்சினைகளுக்கு முஸ்லிம் சமூகத்தின் அரச அடிமைத்தன அரசியல்தான் காரணம் என்பதை  உலமா கட்சித்தலைவர் அடிக்கடி சொல்லி வருகிறார். இவற்றுக்கான தீர்வுகளையும் தெளிவாக சொல்லியும் மீண்டும் சில முட்டாள்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள், உங்களிடம் என்ன தீர்வு என கேட்கிறானுகள். இதோ அவரது கருத்துக்களிலிருந்து நான் பெற்றவை:


முஸ்லிம் சமூகம் தற்போதுள்ள சுயநல ஏமாற்று முஸ்லிம் கட்சிகளை ஒதுக்கி விட்டு உலமாக்கள் தலைமையிலான முஸ்லிம் மக்கள் கட்சியை (உலமா கட்சி) பலப்படுத்த முன்வரவேண்டும்.
இன்றிருக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு முஸ்லிம்கள் அதிக சந்தர்ப்பம் கொடுத்தும் ஏமாந்ததுதான் மிச்சம். அதனால் உலமா கட்சிக்கொரு  சந்தர்ப்பம் தந்து பாருங்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் அமசை;சுப்பதவிகளுக்காக அரசிடம் சரணடைந்ததால் இந்தக்கேவலங்கள் தொடர்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸ் மூலமோ, அதா, ரிசாத் கட்சிகள் மூலமோ முஸ்லிம்கள் தமது உரிமைகளை வெல்ல முடியாது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

கிழக்கு மாகாண சபையில் த  தே கூட்டமைப்பு மற்றும் ஐ தே கவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும்படி சொன்ன ஒரேயொரு முஸ்லிம் கட்சி உலமா கட்சி மட்டுமே. அதே போல் ஹக்கீம் மத்தியில் அமைச்சராக இருக்கும் வரை இது நடக்காது என்பதையும் ஆணித்தரமாக சொன்னதும் முபாறக் மௌலவி மட்டுமே.

முஸ்லிம் மக்கள் மத்தியில் அரசுடன் இணையாத முஸ்லிம் எதிர் கட்சி ஒன்று பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். அதில் ஒன்றிரண்டு உறுப்பினர்கள் இருந்தாலும் போதும்.

உலமா கட்சி பாராளுமன்றத்துக்கு போனால் அரசுடன் இணைய வேண்டி ஏற்பட்டால் அதன் தலைவர் அமைச்சுப்பதவிகளை ஏற்கக்கூடாது என்பது உலமா கட்சியின் யாப்பில் உள்ளது.

அளுத்கம, பேருவல சம்பவம் அரச துணையுடன் ஏற்பட்டது. அந்த அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுப்பவர்கள் ஹக்கீம் ரிசாத் அதாவுள்ளா. முதலில் இவர்களை நாம் கண்டிக்க வேண்டும்.
நம்மால் ஜனாதிபதியை நோக்கி கல் எறிய முடியாது. அதனால் இந்த முஸ்லிம்  அமைச்சர்களை பகிரங்கமாக கண்டிக்க வேண்டும். அவர்கள் முஸ்லிம்களிடம் வந்தால் அவர்களுக்கெதிராக கறுப்புக்கொடி காட்ட வேண்டும். அவர்களுக்கு விடும் அடி மேல் மட்டத்துக்கு வலிக்கும்.

300 ரூபா கொடுத்தால் முழு பொய் சொல்லும் ஹராமான தொழிலைக்கொண்ட சட்டத்தரணிகளை முஸ்லிம்கள் தமது அரசியல் பிரதிநிதிகளாக ஏற்கக்கூடாது. அவர்கள் 30 லட்சத்தை கண்டால் சமூகத்துக்கு பல பொய் சொல்ல தயங்கமாhட்டார்கள். இப்படி பல நல்ல விடயங்களை துணிச்சலாக சொல்வது உலமா கட்சி மட்டும்தான். நீங்கள் அதனுடன் இணைந்து செயற்பட்டுப்பாருங்கள். நீங்கள் அதனுடன் சேர்ந்தவுடன் உங்களை அறியாமல் உங்களுக்கு உங்கள் தனிப்பட்ட வாழ்வில் இறை பரக்கத் கிடைக்கும். இதனை விடுத்து முபாறக் மௌலவி குறை சொல்கிறார் என சொல்லி நீங்கள் அவரை குறை சொல்வது சரியா?
-கல்முனை தாசன்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar