BREAKING NEWS

பிரதி அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து அன்பளிப்புகளை வழங்கினார்.

பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா அளுத்கம, தர்கா நகர், பேருவல பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நான்காவது
தடவையாகவும் இப்பிரதேசங்களுக்கு சென்ற பிரதி அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து அன்பளிப்புகளை வழங்கினார். துந்துவை பிரதேசத்தில் அசாதாரண சூழ்நிலைகளில் முஸ்லிம்களை காப்பாற்றிய துந்துவை விகாரையின் தேரரையும் சந்தித்து பிரதி அமைச்சர் தனது நன்றிகளை தெரிவித்தார்.
பிரென்டிக்கஸ் நிறுவண பணிப்பாளர் பெரோசொமா மற்றும் அமைச்சு அதிகாரிகளுடன் பிரதி அமைச்சர் இப்பிரதேசங்களுக்கு சென்றிருந்தார்.



Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar